இந்தியா

“ஒரே ஆண்டில் இடம்பெயர்ந்த 50 லட்சம் இந்தியர்கள்” : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - காரணம் என்ன தெரியுமா?

கடந்த ஆண்டில் இந்தியாவில் சுமார் 50 லட்சம் பொதுமக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

“ஒரே ஆண்டில் இடம்பெயர்ந்த 50 லட்சம் இந்தியர்கள்” : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - காரணம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமீப ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. மேலும் உக்ரைன் போர், ஏழ்மை போன்ற செயற்கை பேரழிவுகள் காரணமாகவும், பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இடம் பெயர்வு குறித்து ஆய்வு நடத்திய ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணை அமைப்பு, கடந்த ஆண்டில் வன்முறை, உணவுப் பாதுகாப்பின்மை, மனித உரிமை மீறல்கள், பருவநிலை மாற்றம், உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

“ஒரே ஆண்டில் இடம்பெயர்ந்த 50 லட்சம் இந்தியர்கள்” : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - காரணம் என்ன தெரியுமா?

அதிகபட்சமாக சீனாவில் மிகப்பெரிய அளவில் 60 லட்சம் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், பிலிப்பைன்ஸில் 57 லட்சம் பேரும், இந்தியாவில் 49 லட்சம் பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் 2021ஆம் ஆண்டின் இறுதியில் போர், வன்முறை காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9 கோடி என கூறப்பட்டுள்ளது.

“ஒரே ஆண்டில் இடம்பெயர்ந்த 50 லட்சம் இந்தியர்கள்” : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - காரணம் என்ன தெரியுமா?

இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அதே நேரம் இது 10 ஆண்டுகளுக்கு முந்தைய எண்ணிக்கையைவிட இருமடங்கு அதிகமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பருவ நிலை மாற்றம் காரணமாக இடம் பெயர்ந்தவர்களில் பலர் வெகு விரைவில் தங்கள் சொந்த இடத்துக்கு திரும்புவர் எனவும், ஆனால் வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது தங்கள் சொந்த இடத்துக்கு திரும்புவர் எண்ணிக்கை குறையும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories