இந்தியா

உ.பி-யில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த பள்ளி ஆசிரியர் : போலிஸ் விசாரணையில் ‘பகீர்’ தகவல்! (வீடியோ)

உத்தர பிரதேசம் மாநில மெயின்புரி நகரில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் சுற்றித்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-யில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த பள்ளி ஆசிரியர் : போலிஸ் விசாரணையில் ‘பகீர்’ தகவல்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசம் மாநில மெயின்புரி நகர் அருகே உள்ள கோட்வாலி பகுதியில் இளம் பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார், அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரை அழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது அந்தபெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் போலிஸார் அந்தப்பெண்ணை சோதனை செய்த போது, அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலிஸார் அவரை கைது விசாரத்ததில், அவர் கரிஷ்மா என்பதும் இவர் ஃபிரோசாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்பது தெரியவந்தது. மேலும் ஆயுதத்தை எதற்காக எடுத்துச் சென்றார் என போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories