இந்தியா

நடுரோட்டில் மளமளவென தீப்பற்றி எரிந்த ‘ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்’.. புனேவில் பகீர் சம்பவம் - பின்னணி என்ன?

புனேவில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் தீ பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் மளமளவென தீப்பற்றி எரிந்த ‘ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்’.. புனேவில் பகீர் சம்பவம் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக்காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணமாக பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தை குறிப்பிடுகின்றனர்.

மக்களின் தேவையை உணர்ந்த நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின. பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்த நிறுவனங்களுக்கு போட்டியாக டாக்சி நிறுவனமாக இருந்த OLAவும் மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்கிது.

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது விற்பனையை சென்னை மற்றும் பெங்களூருவில் தொடங்கியது. இந்த வாகனத்திற்கு முன்பதிவு செய்த பலரும், ஓலா ஸ்கூட்டரை அறிமுகம் செய்தபோது குறிப்பிட்ட சில அம்சங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள வாகனங்களை இல்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், மின்சார வாகனங்கள் மீது தொடர்ச்சியாக தொழில்நுட்ப புகார் எழுந்துள்ள வேளையில், பல இடங்களில் வாகனம் தீப் பிடித்து எரியும் சம்பவம் நடந்துள்ளது. அந்தவகையில், புனேவில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் தீ பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் வணிக வளாகங்கள் நிறைந்த அங்காடி பகுதியில், ஓலாவின் S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வெளியேறி நிலையில் அடுத்த சில நொடிகளில் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories