இந்தியா

“ஜெயில் கம்பி இடுக்கு வழியாகவே ‘எஸ்கேப்’ ஆன கைதி” : திருடனின் செயலைக் கண்டு ஷாக்கான போலிஸார்!

னேவில் உள்ள ஜெயில் ஒன்றின் கம்பி இடுக்கில் புகுந்து கைதி ஒருவர் வெளியே தப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஜெயில் கம்பி இடுக்கு வழியாகவே ‘எஸ்கேப்’ ஆன கைதி” : திருடனின் செயலைக் கண்டு ஷாக்கான போலிஸார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஜெயில் ஒன்றின் கம்பி இடுக்கில் புகுந்து கைதி ஒருவர் வெளியே தப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கைதியை தேடிப் பிடித்த போலிஸார் மீண்டும் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

ஒரு திருட்டு வழக்கில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சக்கன் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 19 வயது கைதி, அங்கிருந்து தப்பினார். ஜெயில் அறையில் எந்தவித சேதாரமும் ஏற்படுத்தாமல் அந்தக் கைதி எப்படி தப்பித்தார் என போலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சுமார் இரண்டு மணி நேரமாக போலிஸார் தீவிரமாகத் தேடி, அந்தக் கைதியை மீண்டும் பிடித்து ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் தப்பித்து சென்றது எப்படி என போலிஸார் விசாரித்துள்ளனர்.

அதற்கு அந்தக் கைதி, “இதோ இப்படித்தான்” எனக் கூறி தனது ஒல்லியான தோற்றத்தால் ஜெயில் கம்பிகளின் இடுக்கில் புகுந்து வெறும் ஐந்தே நொடிகளில் வெளியே வந்து காட்டியுள்ளார்.

தான் தப்பித்தது எப்படி என கைதி நடித்துக்காட்டுவதை போலிஸார் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories