இந்தியா

கல்யாணத்தை நிறுத்த இப்படி ஒரு காரணமா? மணமகளின் முடிவால் அதிர்ச்சியில் திருமண வீட்டார்; உ.பியில் பரபரப்பு!

திருமணச் சடங்கின் போது மணமகன் செய்த காரியத்தால் அதிருப்தியான பெண் கல்யாணத்தையே நிறுத்தியிருக்கிறார்.

கல்யாணத்தை நிறுத்த இப்படி ஒரு காரணமா? மணமகளின் முடிவால் அதிர்ச்சியில் திருமண வீட்டார்; உ.பியில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணமகனின் செயலால் அதிருப்திக்கும் கோபத்துக்கும் ஆளான மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆவ்ரையா மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

பிதுனா கொட்வாலியில் உள்ள நவீன் பஸ்தி பகுதியில் திருமண நிகழ்வு நடந்திருக்கிறது. அப்போது வரமாலை என்ற சடங்கின் போது மணப்பெண்ணுக்கு மாலை போடும் நிகழ்வின் போது மாப்பிள்ளை மாலையை பெண்ணின் கழுத்தின் மீது போடாமல் அதனை தூக்கி எறிந்திருக்கிறாராம்.

இதனால் கடுப்பான மணமகள் மணமகனை திருமணம் செய்துக்கொள்ள பிடிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும் முதலில் பெண்ணை சமாதானம் செய்திருக்கிறார்கள். மணமகனும் தான் அவ்வாறு மாலையை வீச எறியவில்லை எனக் கூறியிருக்கிறார்.

இருப்பினும் தனது முடிவில் பெண் உறுதியாக இருந்திருக்கிறார். இதன் காரணமாக இரு வீட்டாரிடையே வாக்குவாதம் நீடித்திருக்கிறது. இதனையடுத்து போலிஸை வரவைத்து இந்த விவகாரத்துக்கு முடிவுக்கட்ட முற்பட்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து இரு வீட்டாரும் தத்தம் கொடுத்த பொருட்களை திரும்பி பெற்றுக்கொண்டு திருமணத்தை நிறுத்தி கலைந்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் திருமணத்துக்கு வந்த உறவினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories