இந்தியா

சிறையில் போட்ட ஸ்கெட்ச்.. அதிர்ச்சியடைந்த போலிஸ்: புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!

புதுச்சேரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறையில் போட்ட ஸ்கெட்ச்.. அதிர்ச்சியடைந்த போலிஸ்: புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. பிரபல ரவுடியான இவர் மீது 25க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த ரவி, நண்பர் ஸ்டீபன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

வாணரப்பேட்டை ஆலன் வீதி அருகே சென்ற போது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியது. பிறகு ரவி மற்றும் ஸ்டீபனை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த கொடூர சம்பம் நேற்று முன்தினம் பட்டப்பகலில் நடந்ததால் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இந்த கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரவியை கொலை செய்வதற்கான திட்டம் காலாப்பட்டு சிறைக்குள் போடப்பட்டதை போலிஸார் முதலில் கண்டு பிடித்தனர்.

மேலும், முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவுடி வினோத்திற்கும், ரவிக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. இதனால் வினோத்தின் கூட்டாளி திப்லான் என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

சிறையில் போட்ட ஸ்கெட்ச்.. அதிர்ச்சியடைந்த போலிஸ்: புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!

இந்த கொலைக்குப் பழிவாங்கும் விதமாக ரவியைக் கொலை செய்ய வினோத்தின் கூட்டாளிகள் முடிவு செய்தனர். இந்த முடிவின் படி கடந்த ஜூன் 6ம் தேதி ரவியைக் கொலை செய்ய வாணரப்பேட்டியில் காத்திருந்தனர். ஆனால் அப்போது ரவி அங்கு வரவில்லை. இதனால் இந்த திட்டத்தைத் தள்ளிவைத்தனர்.

இதனிடையே சூதாட்டம் கிளப்பிற்குள் புகுந்து 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த வழக்கில் கடந்த மாதம் 19ம் தேதி வினோத்தை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருந்தபோதும் வினோத் காலாப்பட்டு சிறையிலிருந்து கொண்டே ரவியைக் கொலை செய்வதற்கான திட்டத்தைப் போட்டுச் செயல்படுத்தும் படி கூட்டாளிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின அடிப்படையில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி, ரவியை வினோத்தின் கூட்டாளிகள் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளனர். இதையடுத்து சினோத் மற்றும் தீன் என்பவர்கள் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் வினோத்தின் தாய் ரமணி, அரவிந்து, பிரகாஷ், ராஜேஷ், சந்துரு, வெங்கடேசன் நவீன் உள்ளிட்ட 6 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச் சென்ற கூலிப்படை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories