இந்தியா

100க்கும் மேற்பட்ட திருட்டுகள்... திருடர் குல திலகமான பிரபல விளையாட்டு வீரர்... அதிர்ச்சியடைந்த போலிஸ்!

விளையாட்டு வீரர் ஒருவர் 100க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

100க்கும் மேற்பட்ட திருட்டுகள்... திருடர் குல திலகமான பிரபல விளையாட்டு வீரர்... அதிர்ச்சியடைந்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியின் மோதி நகர் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் போலிஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி போலிஸார் விசாரித்தனர்.

அப்போது அந்த நபர் வந்த இருசக்கர வாகனம் கீர்த்தி நகரில் திருடப்பட்டது என்று போலிஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் கராத்தே போட்டியில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர் சுராஜ் என்பதை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

உத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த சுராஜ், சம்சி மண்டி பகுதியில் செல்போன்கள் மற்றும் தங்க நகைகள் திருடியுள்ளார். இவர் இப்படி வழிப்பறி செய்த நகைகள் மட்டும் 2.5 கிலோவுக்கு மேல் இருக்கும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் 100க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து சுராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகள் இருவரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி ஒன்றும் துப்பாக்கி குண்டுகளும், கத்திகள், 55 திருடப்பட்ட போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories