இந்தியா

வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கணவன்: பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அரங்கேறும் அவலம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் மனைவியைக் கணவன் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கணவன்: பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அரங்கேறும் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தில் புலந்த்சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹசீம். இவர் தனது மனைவியை உறவினர்கள் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளதாக போலிஸார் கூறுகின்றனர். மேலும் ஞாயிறன்று அந்தப் பெண்னை மீண்டும் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் இறந்து 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் கணவன் மற்றும் உறவினர்களை போலிஸார் கைது செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், "முதல் மனைவியை விவாகரத்து செய்வதாகக் கூறி கடந்த மாதம் எனது சகோதரியைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் வரதட்சணை கேட்டு தொடர்ந்து அவளைத் தாக்கி வந்தார்.

இந்நிலையில்தான் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அடித்தே எனது சகோதரியைக் கொலை செய்துள்ளனர். இது போன்ற கொடூரம் எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. எனது சகோதரிக்கு நீதி வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் கொலை மற்றும் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஹசீமை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories