இந்தியா

“தலித் சிறுமியும் இந்தியாவின் மகள்தான்” : டெல்லி சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மோடியை சாடிய ராகுல்!

டெல்லி சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில், “தலித் சிறுமியும் இந்தியாவின் மகள்தான்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“தலித் சிறுமியும் இந்தியாவின் மகள்தான்” : டெல்லி சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மோடியை சாடிய ராகுல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லி நங்கால் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று முன்தினம், அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் மகளைக் காணவில்லை என சிறுமியின் பொற்றோர் தேடி அழைந்துள்ளனர். இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி சிறுமி ஒருவரை மயானத்தில் எரித்துக்கொண்டிருப்பதாக, தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பதறியடித்துச் சென்ற பார்த்தபோது, கோவில் பூசாரி உட்பட 4 பேர் சிறுமியின் உடலை ஏரித்துக்கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர் பூசாரியை தாக்கியுள்ளனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இதுகுறித்து விசாரித்தபோது, சிறுமி தண்ணீர் தொட்டியில் இருந்த மின் ஒயரை தொட்டதால், இறந்து விட்டதாக கூறி, தாயின் சம்மதம் பெறாமலேயே சிறுமியின் உடலை எரித்தாக கூறியுள்ளனர்.

பின்னர் எரிந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பூசாரி மற்றும் அவரது 3 நண்பர்கள் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பூசாரி ராதே சியாம் (55) உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில், ‘தலித் சிறுமியும் இந்தியாவின் மகள்தான்’ என குறிப்பிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படும் இந்திய வீராங்கனைகளை பிரதமர் மோடி இந்திய மகள்கள் என கூறிவரும் நிலையில், ராகுல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories