இந்தியா

“இரண்டாவது அலைக்கு மோடி எனும் ‘சூப்பர் ஸ்பெரெட்டர்’தான் காரணம்” - IMA துணைத் தலைவர் குற்றச்சாட்டு!

இந்தியாவில் தொற்றுநோய் நெருக்கடியைக் கையாள்வதில் பிரதமர் மோடியும், அவரது அரசும் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் விமர்சித்தன.

“இரண்டாவது அலைக்கு மோடி எனும் ‘சூப்பர் ஸ்பெரெட்டர்’தான் காரணம்” - IMA துணைத் தலைவர் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘இந்தியாவில் கொரோனா தொற்று, இவ்வளவு வேகமாகப் பரவுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், அவர் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும்தான் காரணம்!’ என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (Indian Medical Association - IMA) துணைத் தலைவர் டாக்டர் நவ்ஜோத் தாஹியா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, ‘தி டிரிப்யூன்’ (The Tribune) ஏட்டிற்கு தாஹியா பேட்டி அளித்துள்ளார். அவர் பேட்டி வருமாறு:-

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் நோயாளி இந்தியாவில் 2020 ஜனவரியில் கண்டு பிடிக்கப்பட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி, தொற்று நோயைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, குஜராத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கூட்டி, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை வரவேற்றார்.

அதன் பிறகும்கூட, கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை உச்சம்பெறாத கடந்த ஓராண்டு காலத்தில், மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொறுப்பற்ற மோடி!

3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லி எல்லையில் குவிந்து, கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போதும் பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பான முறையில் செயல்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை பேசித் தீர்த்து, அவர்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக, அவர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவதை அனுமதித்தார். கடைசியாக தொற்றின்2-ஆவது அலை ஏற்பட்ட நேரத்தில், கொரோனா தடுப்புக்கான கட்டாய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என மக்களுக்குப் புரியவைக்க மருத்துவ சகோதரர்கள் கடுமையாக போராடிக் கொண்டிருந்தனர்.

“இரண்டாவது அலைக்கு மோடி எனும் ‘சூப்பர் ஸ்பெரெட்டர்’தான் காரணம்” - IMA துணைத் தலைவர் குற்றச்சாட்டு!

விதிமுறைகளை காற்றில் வீசிய மோடி!

ஆனால், பிரதமர் மோடியோ, அந்த நேரத்தில் நாடு முழுவதும் பிரம்மாண்ட தேர்தல் பொதுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். கொரோனா பாதுகாப்பு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் காற்றில் தூக்கி வீசினார். அரசியல் உரையாற்றுவதற்கு அவர் கொஞ்சமும் தயங்கவில்லை.

மேற்குவங்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு கூட மோடியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். தேர்தல் கூட்டங்களை நடத்திக் கொண்டே, லட் சக்கணக்கானோர் கூடிய கும்ப மேளாவுக்கும் அவர் அனுமதி கொடுத்தார்.

இதன் மூலம் நாட்டில் கொரோனா பரவுவதற்கு பிரதமர் மோடியே மிக முக்கியமான காரணமாகிவிட்டார். மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முழுசுகாதார முறையும் இன்று தோல்வி அடைந்துள்ளது.

பா.ஜ.க. அரசு தோல்வி!

இந்தியாவில் தொற்றுநோய் நெருக்கடியைக் கையாள்வதில் பிரதமர் மோடியும், அவரது அரசும் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் விமர்சித்தன. அதுவும் பிரதமர் காதில் விழவில்லை. ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதற்கான பல திட்டங்களுக்கே கூட, மோடி அரசு அனுமதி வழங்காமல் கிடப்பில் வைத்தது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பல நோயாளிகள் இறப்பதற்கு இன்று மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறைதான் முக்கியக் காரணமாகி இருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல நோயாளிகள் உயிரிழந்து கொண்டிருப்பதும் கொரோனா தொற்றுப் பரவலின் தீவிரத்திற்கான வெளிப்படையான சாட்சிகளாக மாறியிருக்கின்றன. இதற்கான காரணமாக மோடி இருக்கிறார்.

இவ்வாறு டாக்டர் நவ்ஜோத் தாஹியா விமர்சித்துள்ளார்

banner

Related Stories

Related Stories