இந்தியா

50% இடஒதுக்கீடு அரசாணை வழக்கு : தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!

அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

50% இடஒதுக்கீடு அரசாணை வழக்கு : தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு படிப்புகளில் சேர்வதற்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அதனை அரசாணையாக வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சில மருத்துவ மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. கேவியட் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அப்போது தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories