இந்தியா

“தொல்லியல் படிப்பில் செம்மொழி தகுதிக்கான பிரிவில் ‘தமிழ் மொழி’ சேர்ப்பு” : எதிர்ப்பால் பணிந்த மோடி அரசு!

தொல்லியல் துறை பட்டயப்படிப்பு அறிவிப்பில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

“தொல்லியல் படிப்பில் செம்மொழி தகுதிக்கான பிரிவில் ‘தமிழ் மொழி’ சேர்ப்பு” : எதிர்ப்பால் பணிந்த மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், தமிழ் உள்ளிட்ட தொன்மைவாய்ந்த மொழிகளைப் புறக்கணிப்பதுமான போக்கு தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் இந்திய கலாசாரம் பற்றி ஆய்வு செய்தவதற்கான குழுவை அமைத்தது பா.ஜ.க அரசு. 16 பேர் கொண்ட அக்குழுவில் ஒருவர் கூட தென்னிந்தியர் - சிறுபான்மையினர் - பட்டியலினத்தவர் இடம்பெறவில்லை என்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிவிக்கையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையை மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. இப்படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை.

“தொல்லியல் படிப்பில் செம்மொழி தகுதிக்கான பிரிவில் ‘தமிழ் மொழி’ சேர்ப்பு” : எதிர்ப்பால் பணிந்த மோடி அரசு!

தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித் தகுதியில் செம்மொழி தமிழ் இடம்பெறாதது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்மொழியான தமிழ் மொழி படித்தோருக்கு திட்டமிட்டு வாய்ப்புகளை மறுப்பதா என பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தன.

குறிப்பாக, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழ்மொழியின் மீது பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தும், ஒருமைப்பாட்டை ஒழித்திட முனையும் இந்திய ஒன்றியத்தின் பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து கண்டனக் குரல் எழுப்புவோம்!" என அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து, மத்திய அரசின் தொல்லியல் துறையின் முதுகலைப் பட்டப் படிப்புக்கான கல்வித் தகுதியில் செம்மொழியான தமிழ் மொடி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து செம்மொழியான தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் அழகுமணி நேற்று முறையீடு செய்தார்.

“தொல்லியல் படிப்பில் செம்மொழி தகுதிக்கான பிரிவில் ‘தமிழ் மொழி’ சேர்ப்பு” : எதிர்ப்பால் பணிந்த மோடி அரசு!

இந்த முறையீடு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை அவசர வழக்காக இன்று (அக்.,9) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தொல்லியல் துறை பட்டயப்படிப்பு அறிவிப்பில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள மறு அறிவிப்பில், தகுதிக்கான பிரிவில் செம்மொழி தமிழ் மொழி சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழி அந்தஸ்து உள்ள மற்ற மொழிகளும் சேர்க்கப்பட்டு தொல்லியல் துறை இயக்குனர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories