இந்தியா

“உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 28,701 பேர் பாதிப்பு” - என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?

நாடுமுழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளது.

“உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 28,701 பேர் பாதிப்பு” - என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 13,039,853 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 571,659 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,413,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 137,782 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 28,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர்.

“உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 28,701 பேர் பாதிப்பு” - என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?

இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்துள்ளது. அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 1,29,888 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள சூழலில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories