இந்தியா

“நமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை” : கொரோனா காலவரிசையும் மோடி அரசின் நடவடிக்கைகளும்!

உலக சுகாதார நிறுவனமும், பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது இந்திய அரசு என்ன செய்தது?

“நமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை” : கொரோனா காலவரிசையும் மோடி அரசின் நடவடிக்கைகளும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டிசம்பர் - 31, 2019 : வூஹான் நகரில், காரணம் தெரியாத நிமோனியாவால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு மக்கள் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள் என சீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீன அரசு தகவல் தருகிறது.

ஜனவரி 01., 2020 : முதலில் கண்டறியப்பட்ட நிமோனியா நோயாளிகள் சென்றுவந்த ஹுனான் கடல் உணவு "மொத்த அங்காடி" கிருமி நீக்கத்திற்காக மூடப்படுகிறது.

ஜனவரி 02 : உலக சுகாதார நிறுவனத்தின் நோய் பற்றிய தகவல்களை சேகரிக்கும் கட்டமைப்பு (incident management system) செயல்பட ஆரம்பிக்கிறது. இந்த அமைப்பு உலக நாடுகளுக்கு உடனடியாக நோய் பற்றிய தகவலை கொண்டு சேர்க்கும்.

31 டிசம்பர் முதல் ஜனவரி 3 வரை காரணம் தெரியாத நோயினால்புதிதாக பாதிக்கப்பட்ட 44 பேர் சீனாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த புதிய வைரஸ் ஏற்கனவே வந்துபோகின்ற சார்ஸ் அல்லது மெர்ஸ் வைரஸ் அல்ல என்று உடனடியாக உறுதி செய்யப்படுகிறது.

வைரஸ் பற்றிய மரபணு மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் "ஆழமாக சேகரிக்கும்" (deep sequencing) தொழில்நுட்பம் இப்போது உலகத்திடம் உள்ளதால் உடனைடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.

“நமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை” : கொரோனா காலவரிசையும் மோடி அரசின் நடவடிக்கைகளும்!

ஜனவரி 07 : புதியவகை கொரோனா வைரஸ் (novel) தான் இந்த புதிய நியூமோனியா தொற்றுநோய்க்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்படுகிறது. முழு மரபணு வரிசை (whole sequencing) கிடைத்தால்தான் சோதனை செய்யஉதவும் முறை/கருவிகள் கண்டுபிடிக்கமுடியும்.

ஜனவரி 12 : புதிய வைரஸின் மரபணு வரிசை வெளியிடபப்டுகிறது. ஆரம்ப கட்டத்தில், நோயறிதல் மற்றும் நோய்க்கான சிகிச்சை நெறிமுறைகள், கண்காணிப்பு, தொற்றுநோயியல் விசாரணை (epidemiological investigation), நெருங்கிய தொடர்புகளை கண்டறிதல் (contact tracing) மற்றும் நோய் கண்டறியும் சோதனை (testing methodology) ஆகியவை உருவாக்கப்படுகிறது.

ஜனவரி13 : தாய்லாந்து நாடு முதல் கொரோனா நோயாளி உறுதிசெய்யப்பட்டதாக அறிவிக்கிறது. அந்த நோயாளி வுஹான் நகரில் இருந்து வந்தவர். சீனாவிற்கு வெளியே அறியப்பட்ட முதல் நோயாளி

ஜனவரி 20 : அமெரிக்காவின் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்படுகிறார். இவர் வாஷிங்டன் நகரத்தை சேர்ந்தவர், வுஹான் சென்று தன்னுடைய குடும்பத்தினரை சந்தித்து திரும்பி வந்தவர்.

கோவிட்19, B வகை தொற்று என அறிவிக்கப்பட்டு, மாகாண எல்லை, நாட்டு எல்லைகளில் தனிமைப்படுத்தும் பணிகள் துவங்குகின்றன. வனவிலங்கு அங்காடிகளை நாடு முழுவதும் மூடுவதற்கு சீன அரசாங்கம் உத்தரவிடுகிறது. சர்வேதேச கண்காணிப்பு அனைத்து நாடுகளிலும் தொடங்குகிறது.

“நமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை” : கொரோனா காலவரிசையும் மோடி அரசின் நடவடிக்கைகளும்!

ஜனவரி 23-25 : உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தலைமையில் அவசரக் கூட்டம் கூட்டப்படுகிறது. கொரோனா தொற்றை சர்வதேச சமூகம் கவனப்படுத்த வேண்டிய நோயாக அறிவிக்க வேண்டுமா என்று விவாதிக்கிறது. கொரோனா தொற்றை தொடர்ந்து கண்காணிக்குமாறு அனைத்து நாடுகளும் அறிவுறுத்தப்படுகின்றன.

ஜனவரி 23 : சீனாவில் பல்வேறு முன்னெடுப்புகள் அறிவிக்கப்படுகின்றன. பொது மக்கள் ஒன்றாக கூடுவது தடை செய்யப்படுகிறது. தொற்று நோயயை கையாள பல்வேறு நெறிமுறைகளை சீன அரசு அறிவிக்கிறது.

ஜனவரி 24: ஐரோப்பியாவின் முதல் கொரோனா நோயாளி பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்படுகிறார். சீனாவிற்கு வெளியே நோய் பரவல் அதிகமாக ஆரம்பிக்கிறது

ஜனவரி 30 : உலக சுகாதார நிறுவனம் கோவிட் 19 நோயை சர்வதேச கவனத்தைக் கோரும் தொற்றாக (Public Health Emergency of International Concern) அறிவிக்கிறது

“நமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை” : கொரோனா காலவரிசையும் மோடி அரசின் நடவடிக்கைகளும்!

ஜனவரி 31 : இந்தியாவின் முதல் கோவிட்19 நோயாளி கண்டறியப்படுகிறார்.

பிப்ரவரி 11 : வைரஸிற்கும் நோய்க்கும் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. வைரஸ் Sars Cov 2 என்றும் அதனால் ஏற்படும் நோய் கோவிட் 19 என்றும் அறியப்படும்.

உலகம் முழுவதிலும் தொற்றை கண்காணிக்கவும், சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும், அறிகுறிகளை கொண்டு நோயாளிகளை கண்டறியவும், பல்வேறு நெறிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.

பிப்ரவரி 28 : ஆப்பிரிக்கா கண்டத்தின் முதல் கோவிட் நோயாளி கண்டறியப்படுகிறார்

மார்ச் 11 : கொரோனா தொற்றால் ஏற்படும் கோவிட்19 நோயை உலக கொள்ளைநோயாக (Global Pandemic) அறிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

“நமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை” : கொரோனா காலவரிசையும் மோடி அரசின் நடவடிக்கைகளும்!

இப்படி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருந்தனர். ஜனவரி 31ம் தேதியே முதல் நோயாளி கண்டரியப்பட்டது. அதன்பிறகு அரசு தற்போது மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மோடி அரசாங்கம் எடுத்துள்ளது.

இந்த நேரத்தில் எல்லாம் நமக்கு கிடைத்த வாய்ப்புகளை தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வீணடித்துவிட்டு இன்று கொரோனா பரவுவதை தடுக்கமுடியாமல் இஸ்லாமியர்கள் மீது பழியை போட்டு மோடி அரசு தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது.

உலக சுகாதார நிறுவனமும், பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது இந்திய அரசு என்ன செய்தது என்றால்,

பிப்ரவரி 1 - 20 : தேதி வரைக்கும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் வேலையை மேற்கொண்டு, லட்சக்கணக்கான மக்களை திரட்டி அதிபர் ட்ரம்ப்-க்கு விழா நடத்தினார்.

“நமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை” : கொரோனா காலவரிசையும் மோடி அரசின் நடவடிக்கைகளும்!

பிப்ரவரி 24 : டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸாமியர்கள் நடத்திய அமைதி போராட்டத்தில், பா.ஜ.க தலைவரின் சர்ச்சைப்பேச்சால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து பெரும் வன்முறை சம்பவம் அறங்கேறியது.

மார்ச் 4 : கொரோனா பற்றி அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் முதல் சந்திப்புக் கூட்டம் நடந்தினர்.

மார்ச் 09 : விமான நிலையங்களில் கொரோனா தொற்று இருப்பதைக் கண்காணிக்கும் பணியை செய்தனர்.

மார்ச் 13 : மோடி அரசு கொரோனா ஒரு சுகாதார அவசரநிலை அல்ல என்று கூறியது.

மார்ச் 14: மத்திய பிரேத அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பா.ஜ.க ஆர்வமாக இருந்தது.

“நமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை” : கொரோனா காலவரிசையும் மோடி அரசின் நடவடிக்கைகளும்!

மார்ச் 16 : கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிப்பதற்காக காணொலி காட்சி மூலம் சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

மார்ச் 19 : பிரதமர் மோடி கொரோனா தொடர்பாக மக்களிடம் முதன் முதலாக உரையாற்றினார். அப்போது கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். அன்று காலை 7 முதல் இரவு 9 வரை இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மார்ச் 20 - 21 : மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு செய்து புதிதாக பா.ஜ.க தலைமையிலான அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது.

மார்ச் 24 : மோடி கூறியதன் பேரில் ஒருநாள் தேசிய சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

மார்ச் 25 : மத்திய அரசு நாடுமுழுவதும் விமான சேவையை ரத்து செய்தது. (அதுவரை வெளிநாட்டவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என விமான சேவையை பயன்படுத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

மார்ச் 26 : நாடுமுழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

“நமஸ்தே ட்ரம்ப் முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை” : கொரோனா காலவரிசையும் மோடி அரசின் நடவடிக்கைகளும்!

ஜனவரியில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 ஆக இருந்தநிலையில் இன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,834 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பு மேலும் அதிகமாகும் என மருத்துவத்துறயைச் சார்ந்த் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது நடவடிக்கையை சரியா செய்யத மோடி அரசு அப்பாவி இஸ்லாமியர்கள் மீது பழிப்போடுகிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நடவடுக்கை எடுக்கும் வேலையில் இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு மத சாயம் பூசும் வேலையை மோடி அரசின் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள இத்தகைய நிலைமைக்கு உலக நாட்டுத் தலைவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories