இந்தியா

கொரோனா ஊரடங்கு: பரிதவிக்கும் ஒரு லட்சம் மக்களுக்கு ரூ.1.25 கோடி நிதி ஈட்டிய சானியா மிர்சா! 

கொரோனா அச்சத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாடி வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு ரூ.1.25 கோடி நிதியை வழங்கியுள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா. 

கொரோனா ஊரடங்கு:  பரிதவிக்கும் ஒரு லட்சம் மக்களுக்கு ரூ.1.25 கோடி நிதி ஈட்டிய சானியா மிர்சா! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா கோரத்தாண்டவத்தின் உயிர் பலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் இதற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் ஒருசேர உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கால் மிகவும் பின் தங்கிய மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தங்கள் அன்றாட நாளை கழிப்பதில் திணறி வருகின்றனர். கொரோனா வந்து சாவதற்கு முன்பு பசியால் உயிர் போய்விடுமோ என நித்தமும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்ய சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களிடம் நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு:  பரிதவிக்கும் ஒரு லட்சம் மக்களுக்கு ரூ.1.25 கோடி நிதி ஈட்டிய சானியா மிர்சா! 

அந்த வரிசையில் சச்சின், கங்குலி, ரெய்னா என பிரபலங்களை தொடர்ந்து தற்போது இணைந்துள்ளார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. யூத் ஃபீட் என்ற அமைப்பின் மூலம், சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு உதவ போதுமான தொகையான 1.25 கோடி ரூபாயை நிதியுதவியாக கொடுத்துள்ளார் சானியா மிர்சா.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சானியா மிர்சா, “கடந்த வாரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தோம். சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு உதவியதோடு அல்லாமல், இந்த முயற்சி மேலும் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நிதியுதவி திட்டத்திற்கு 5 லட்சமும், தெலுங்கானா முதல்வரின் நிதியுதவி திட்டத்திற்கு 5 லட்சமும் என மொத்தம் 10 லட்ச ரூபாயை கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு கொடுத்து உதவியுள்ளார்.

இதேபோல, கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவும் ரூ.45 பிரதமர் நிதிக்கும், ரூ.25 லட்சம் மகாராஷ்டிர முதல்வர் நிதிக்கும், ரூ.5 லட்சம் தெரு நாய்களின் நலனுக்காகவும், ரூ.5 லட்சம் ஆதரவற்றவர்களுக்காகவும் என 80 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories