இந்தியா

“டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும்” - கலவரத்தை தூண்டும் எச்.ராஜா! #BJPBurningIndia 

டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது பா.ஜ.க குண்டர்கள் தாக்குதலில் ஈடுப் ஈடுபட்டது போல சென்னையிலும் வன்முறை நடக்கும் என எச்.ராஜா பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும்” - கலவரத்தை தூண்டும் எச்.ராஜா! #BJPBurningIndia 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாஹீன்பாக் பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வடகிழக்கு டெல்லியில் உள்ள மாஜ்பூர், கோகுலாபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர்.

அந்த சமயத்தில் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா பேரணியின்போது பேசிய பேச்சைக் கேட்டு அமைதி வழியில் போராடி வந்த முஸ்லிம் மக்கள் மீது இந்துத்வா குண்டர்கள் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு போராட்டக்காரர்கள் தரப்பும் பதில் தாக்குதல் நடத்தியது.

“டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும்” - கலவரத்தை தூண்டும் எச்.ராஜா! #BJPBurningIndia 

இந்தத் தாக்குதல் வன்முறையாக வெடித்து போராட்டக்களமான வடகிழக்கு டெல்லி பகுதி முழுவதும் போர்க்களமானது. இதனையடுத்து இஸ்லாமியர்களை தேடித் தேடி வன்முறையில் ஈடுபட்டனர் பா.ஜ.க குண்டர்கள். இதனால் இதுவரையில் ஒரு காவலர் உட்பட 13 பேர் உயிரிழந்தும், 100க்கும் மேலானோர் படுகாயமுற்று சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

நேற்று மாலை வரை தொடர்ந்த இந்த வன்முறை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இராணுவப் படையினரை குவித்த பிறகு சற்று அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

“டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும்” - கலவரத்தை தூண்டும் எச்.ராஜா! #BJPBurningIndia 

இந்நிலையில், பா.ஜ.கவின் தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா, டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்தது சென்னையின் ஷாஹீன்பாக் எனக் கூறப்படும் வண்ணாரப்பேட்டையிலும் நடைபெறலாம். ஆகவே ஆயுதங்கள் வருமுன் அங்கிருந்து கலைந்து செல்வது நல்லது எனும் மிரட்டும் தொணியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக திட்டித் தீர்த்தும், சிலர் இஸ்லாமியர்களை உஷார் படுத்தியும் வருகின்றனர்.

முன்னதாக, டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் கண்டதும் சுடும் உத்தரவு காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்டது. உண்மையில் மற்றுமொரு குஜராத் கலவரத்தை உருவாக்கி பா.ஜ.கவே தனது குண்டர்களை ஏவி இஸ்லாமியர்கள் மீது வன்முறையில் ஈடுபட வைத்துள்ளது என்பதை எச்.ராஜாவின் ட்விட்டர் பதிவின் மூலம் தெளிவாகியுள்ளது.

இதேபோல, பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யான் ராமனும் “சென்னை ஷாகீன்பாக் டெல்லியாக மாறும் முன்னர் இடத்தை காலி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என மிரட்டும் தொணியில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையின் வண்ணாரப்பேட்டை மண்ணடி ஆகிய பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories