இந்தியா

பாலியல் புகார் கொடுத்த பெண் மீது துப்பாக்கிச்சூடு : பீகாரில் மீண்டும் ஒரு உன்னாவ் கொடுமை !

பீகாரில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர்களுக்கு எதிராக போலிஸாரிடம் புகாரளித்த பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகார் கொடுத்த பெண் மீது துப்பாக்கிச்சூடு : பீகாரில் மீண்டும் ஒரு உன்னாவ் கொடுமை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் ராஜ்பூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலித் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஜாபர் கான், ஃபரூக் கான், ஷர்பூக் கான் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலிஸிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை அடுத்து பாலியல் தொல்லை கொடுத்த நால்வரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று (டிச.,17) புகாரளித்த பெண்ணின் வீட்டிற்கு பத்திரிகையாளர்கள் எனக் கூறிக்கொண்டு வந்த நால்வர் பேட்டியெடுப்பது போல் நடித்து துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை சுட்டு தப்பித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்ணை மீட்ட அவரது குடும்பத்தார் ஜமாஹர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையில் தப்பியோடியவர்கள் பாலியல் வழக்கில் கைதாகியுள்ளவர்களின் கூட்டாளிகள் என தெரிகிறது. துப்பாக்கிச் சூடு நடந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற ராஜ்பூர் போலிஸார், தப்பியோடிய நால்வரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை தற்போது சீராகியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகார் தெரிவித்த பெண்ணை வீடு தேடிவந்து துப்பாக்கியால் சுட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories