இந்தியா

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!

காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 2017-ம் ஆண்டு மட்டும் 12.4 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியில் நிலவி வரும் அபாயகரமான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்தும் வருகின்றது. ஆனால் காற்று மாசுபாடு எவ்விதத்திலும் குறையவில்லை. இந்நிலையில் இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலர் அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சூழலியல் செயற்பாட்டு அமைப்பான ‘பூவுலகின் நண்பர்கள்’ அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வீ.பிரபாகரன் கூறுகையில், “காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 2017-ம் ஆண்டு மட்டும் 12.4 லட்சம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று 2019 -ம் ஆண்டுக்கான உலக காற்று நிலை அறிக்கை-யின் (State of Global Air 2019) ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக டெல்லியில் மட்டும் ஆண்டிற்கு 10 ஆயிரத்து 500 பேர் காற்று மாசுபாட்டால் இறக்கிறார்கள். மூன்று நிமிடத்திற்கு ஒரு குழந்தை நச்சு காற்றை சுவாசிப்பதால் இந்தியாவில் இறக்கிறது என்று நோய்கள் குறித்த (Global Burden of disease 2017) அறிக்கை குறிப்பிடுகிறது.

காற்றின் தரத்தினை பொருத்தவரைக்கும் ( AQI - Air Quality Index) என சொல்லப்படும் காற்றின் தர அளவுகோல் 0-50 சுகாதாரமான அளவு, 51-100 மிதமான அளவு, 101-150 உடல் ஆரோக்கியத்தில் நலிந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும், 151-200 அனைவருக்கும் பாதிப்பு உண்டாகும், 201-300 மோசமான கட்டம், 300+ அபாயகரமானது என தர வரிசையில் பிரிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி டெல்லியில் பதிவாகிய காற்றின் தரம் மிகவும் அபாயகரமான 495 என்ற அளவை தொட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பிறகு மோசமான காற்றின் தரத்தைக் கொண்டுள்ளது.

இந்த அளவிற்கு டெல்லியின் காற்று மாசடைந்திருப்பதற்கு என்ன காரணம் ? பொதுவாக ஒரு இடத்தின் காற்றின் தரம் அபாயகரமாக மாறி அது அந்த பகுதியிலே தங்கிவிடுவதற்கான முக்கிய காரணம்.

1. அந்த இடத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்து வெளிவரக்கூடிய பல்வேறு வகையான மாசு படுத்திகள் உள்ளது.

2. அந்த பகுதியினுடைய தட்ப வெட்பம் மற்றும் பூலோக அமைப்பு இவை ரெண்டும் தான் டெல்லி எப்பொழுதும் மாசடைந்து காணப்படுவதற்கான முக்கிய காரணிகள்.

குறிப்பாக அக்டோபர் இறுதி முதல் நவம்பர் இடையிலான காலகட்டத்தில் டெல்லி காற்று மாசு மிகவும் அதிகமாக இருப்பதற்கான

1. வாகனப் புகை

2. குப்பைகளை எரிப்பது

3. ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச விவசாயிகள் வைக்கோலை எரிப்பது

4. கட்டுமானப் பணிகளில் இருந்து வரும் மாசு

5. தீபாவளி பட்டாசுகள்

6. சாலைகளின் தங்கி இருக்கும் தூசி துகள்கள்

7. தொழிற்சாலைகளின் புகைப்போக்கியில் இருந்து வெளிவரும் புகை.

8. அனல் மின்நிலையங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகை.

9. காற்றில் பறக்கும் சாம்பல் மற்றும் கல்குவாரியில் இருந்து வெளியேறும் தூசி துகள்கள்.

10. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டரப்பகுதிகளில் ஏற்படும் நீண்டநேர தொடர் மின்வெட்டுகளை சமாளிப்பதற்காக தாராளமாக பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர்களில் இருந்து வெளியேறும் புகை.

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!

இப்படி இத்தனை காரணிகளும் சேர்ந்து தான் இந்த 494 AQI என்ற அபாயகரமான எண்ணிகையை டெல்லி தொட்டிருக்கிறது என்றாலும் மொத்த பழியும் விவசாயிகளின் மீது போடப்படுகிறது. சற்றும் கூசாமல் ஊடகங்களும் அரசியல் வாதிகளும் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் தங்கள் வயலில் வைகோல்களை எரிப்பது தான் டெல்லி ஸ்தம்பித்து இருப்பதற்கு இது தான் ஓரே காரணம் போல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

உண்மையில் தற்பொழுது டெல்லி காற்று மாசடைந்திருப்பதில் 35% மாசிற்கான காரணம் விவசாயிகள் வைக்கோலை எரிப்பது என்று அரசாங்க புள்ளிவிவரம் சொல்லுகிறது. அப்படியே 35% காரணமாக விவசாயிகள் இருந்தாலும் ஏன் மீதமுள்ள 65% காரணங்களை பற்றி பேச மறுக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.

விவசாயிகள் தீ வைப்பது முக்கியமான சூழலியல் கேடு தான் என்றாலும் அவர்களையும் நாம் முழுமையாக குறை சொல்லிவிட முடியாது. இதற்கு முன் இத்தனை ஆண்டுகாலம் இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்த அவர்கள் வைக்கோலை மாட்டிற்கு தீவனமாகவும் நிலத்திற்கு உரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் பசுமை புரட்சி என்ற பெயரில் மாடுகளுக்கு பதில் டிராக்டர்களையும், வைக்கோல் உரத்திற்கு பதிலாக ரசாயன உரங்களையும் அரசாங்கம் கொடுத்து பழக்கிய பின்னர் பாவம் அவர்களுக்கு வைக்கோலை என்ன செய்வதென்று தெரியவில்லை.

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!

வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் அதாவது மே - ஜூன் மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மட்டுமே விவசாயிகள் வைகோலுக்கு தீ வைக்கிறார்கள். அதுவும் கோடை மாதங்களான மே - ஜூனில் தான் அதிகபட்சமாக 77% தீயும், அக்டோபர் - நவம்பரில் 23% தீயும் வைக்கிறார்கள்.

அதற்கு கோடை காலத்தில் பலத்த காற்றடிக்காது என்பதானாலும், AQI அந்த அளவிற்கு மோசமான நிலைக்கு போகாது என்பதனால் அப்பொழுது வைக்கும் தீ டெல்லி வாசிகளுக்கு பிரச்சனையாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதில் ஒரு விஷயத்தை நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும்.

டெல்லி காற்று மாசு என்பது குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் பிரச்சனை (Seasonal Issue) இல்லை. ஆண்டு முழுவதும் டெல்லி காற்று மோசமாகவும் மிக மோசமாகவும் தான் இருக்கிறது. அக்டோபர் - நவம்பரில் அது அபாயகரமாக மாறும்போது மட்டும் ஊடகங்கள் பெரிதாக பேசுகிறது, நீதிமன்றங்கள் தாங்களாகவே முன்வந்து பரிந்துரைகளையும் கட்டளைகளையும் விதிக்கிறது, அரசும் உடனடி தற்காலிக நடவடிக்கை எடுத்து மக்களை திருப்தி படுத்துகிறது என்றால் உண்மையில் பிரச்சனையை எங்கிருக்கிறது என்று ஆராய வேண்டி இருக்கிறது.

ஆம் பிரச்சனை பூதாகரமாக மாறும்பொழுது அரசாங்கம் தற்காலிக தீர்வுகளை (காற்றின் தரத்தை AQI 450+ இல் இருந்தது AQI 250+ வரை குறைப்பதற்கான) வழிமுறைகளை முன்வைக்கிறதே தவிர நிரந்தரமாக அனைவரும் சுவாசிக்க கூடிய அளவிற்கு காற்றின் தரத்தை உயர்த்துவதற்கான நிரந்திர தீர்வினை முன்வைப்பதில்லை என்பதே குற்றச்சாட்டு.

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!

இது என்னுடைய தனிப்பட்ட குற்றச்சாட்டு மட்டும் இல்லை,கடந்த 4-ம் தேதியன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பின் வருமாறு கூறி இருக்கிறது.

இரு நாகரிகமான சமூகத்தில் மக்கள் சுற்றுசூழல் கேடுகளால் உயிரிழந்து வருகின்றார். ஒவ்வொரு பிரச்னை வரும்போதும் நாங்களும் உத்தரவு பிறப்பிக்கின்றோம். ஆனால் இதுவரை நிரந்தரமான தீர்வு இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த வரிகளை மிக முக்கியமானதாக பார்க்கிறேன்.

டெல்லி காற்று மாசை குறைப்பதற்காக தற்பொழுது அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை தெரிந்துகொள்வதின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் இந்த வரிகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள்:

1. 10 பேர் கொண்ட GRAP (Graded Response Action Plan) குழுவின் பரிந்துரையின் படி அக்டோபர் 26 முதல் அக்டோபர் 30 வரை கட்டுமான பணிகளுக்கு டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை விதிப்பது.

2. மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் அனல் மின் நிலையங்கள் மற்றும் நிலக்கரி உபயோகிக்கும் தொழிற்சாலைகளை ஒரு வாரத்திற்கு மூடுவது.

3. குழாய் மூலம் இயற்கை எரி வாயுவை பயன்படுத்தாத தொழிற்சாலைகளை தற்காலிகமாக அக்டோபர் 26 முதல் அக்டோபர் 30 வரை மூடுவது.

4. நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை 15 நாட்கள் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை தீவிரமாக கண்காணிப்பது.

5. மாசு கட்டுப்படுத்தும் நடவடிக்கை (Delhi Dusk Action Plan) என்ற புதிய திட்டத்தின் மூலம் கட்டுமான நிறுவனங்களை தீவிரமாக கண்காணிப்பது.

6. சாலையோர தூசுகளை மட்டுப்படுத்துவதற்கு கொண்டு தண்ணீரை சாலைகளில் தெளிப்பது.

7. பள்ளி குழந்தைகளுக்கு 5மில்லியன் N95 Mask முகமூடிகளை இலவசமாக தருவது.

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!

மேலும் நீண்ட கால திட்டமாக:

1. வாகன புகையை குறைப்பதற்காக மீண்டும் Odd-Even (ஒற்றைபடை எண்களில் முடியும் நம்பர் பிளேட்கள் கொண்ட கார்கள் ஒரு நாளிலும் இரட்டைபடை எண்களில் முடியும் நம்பர் பிளேட்கள் கொண்ட கார்கள் அடுத்த நாளிலும் சாலைகளில் ஓடும்) திட்டத்தை அமல்படுத்துவது.

2. நெருப்பு மூட்டும் விவசாயிகளின் குத்தகை நிலத்தை பிடுங்குவது, அபராதம் விதிப்பது.

3. பஞ்சாப் மற்றும் ஹரியான பகுதிகளில் உள்ள 27 லட்சம் விவசாயிகளுக்கு வைக்கோலை எரிக்காமல் இருப்பதற்கான 27 லட்சம் மாற்று கருவியினை தருவது. போன்ற திட்டங்களையும் விதிமுறைகளையும் அறிவித்திருக்கிறது அரசாங்கம்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஏற்கனவே எரியூட்டியதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகளின் மீது முதல் குற்ற பத்திரிக்கையும் (FIR), ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அபராதமும் விதித்திருக்கிறார்கள்.

35 சதவிதமான மாசுக்கு காரணமான விவசாயிகள் மீது நடவடிக்கைகள் எடுத்த அரசாங்கங்கள் 6 5சதவிதமான மாசிற்கு காரணமான மேல்தட்டு மக்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை. இந்த புள்ளியில் இது சூழலியல் பிரச்சனை மட்டும் இல்லை இது ஒரு வர்க்கப் பிரச்சனை என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் அவரின் ட்விட்டர் பக்கத்தில் அபாயகரமான காற்று மாசு காரணமாக தான் குடும்பத்தினருடன் டெல்லியை விட்டு வெளியேறுகிறேன் என்றும். கிரிக்கெட் வீரார்கள் யுவராஜ் சிங்க் மற்றும் ஆஷிஷ் நேஹரா ஆகியோரும் தங்கள் உடல் நலனை மனதில் கொண்டு டெல்லியை விட்டு தங்கள் வெளியேறுவதாக பதிவிட்டிருக்கின்றனர்.

வசதி படைத்தவர்களுக்கு தற்காலிகமாக டெல்லியை விட்டு வெளியேறவும், சொகுசு கார்களில் புகை பாதிக்காமல் பயணம் செய்யவும், வீடுகளில் உயர்தர காற்று சுத்திகரிப்பு கருவிகளை வாங்கி வைத்துக்கொள்ளவும், காற்று மாசின் அபாயத்தில் இருந்து தங்களை பெருமளவு தற்காத்துக்கொள்ளவும் அனைத்து வசதியும் விழிப்புணர்வும் உண்டு.

ஆனால் வாரம் ஒரு முறை 200 ருபாய் கொடுத்து N95 , N99 முகமூடிகளை வாங்கி அணியும் வாய்ப்பில்லாத விளிம்பு நிலை மக்களின் நிலை கொடுமையானது. தாங்கள் செய்த குறைந்த பட்ச தவறுகளுக்காக அதிகபட்ச தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

காற்று மாசுப்பாட்டினால் வட இந்தியாவில் அந்த காற்றை சுவாசிக்கும் மக்களின் மொத்த ஆயுள் காலத்தில் 7 ஆண்டுகள் குறையும் என்று சிக்காகோ பல்கலைகழகத்தின் ஒரு பிரிவின் ஆய்வு சொல்கிறது. கங்கை சமவெளி பகுதி இந்தியாவில் மிக அடர்த்தியாக மக்கள் (40% மக்கள் தொகை அதாவது 1.3 பில்லியன் மக்கள்) வாழும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

நீல வானத்தை காண வழிவகை செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்த டெல்லி அரசாங்கமும் , மத்திய அரசாங்கமும் டெல்லி காற்று மாசை ஒரு ஒருமித்த பிரச்சனையாக (சீரற்ற அதிகப்படியான நகரமயமாக்களின் பிரச்சனையாக) அணுகி அதை குறைப்பதற்காண நீண்டகால திட்டத்தினை முன்வைக்காமல் ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து பார்த்து தற்காலிகமாக அதை மட்டுப்படுதுவதற்கான நடவடிக்கைகளையே இன்றும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!

உதாரணத்திற்கு,

1. வாகன பெருக்கம் அதனினால் ஏற்படும் புகை : இதற்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு ODD-EVEN திட்டம். ஆனால் உண்மையில் இது ஒரு தோல்வியுற்ற திட்டம். அரசை ஏமாற்றி நிறைய மக்கள் இரண்டு நம்பர் பிளேட்டுகள் செய்து வைத்து கொண்டு ஒரே வாகனத்தை பயன்படுத்தினர்.

ODD Number plate காரை even நாட்களில் பயன்படுத்த முடியாதவர்கள் Taxi புக் செய்து மற்றும் Auto விழும் அலுவலகத்திற்கு சென்றார்கள், பலரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தை பயன்படுத்தினார்கள். Odd-Even திட்டம் அமலில் இருந்த பல நாட்களில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் இருந்து வந்த புகை சாதாரண நாட்களில் வரும் வாகனப் புகையை விட அதிகமாக இருந்ததாகவும் தெரியவருகிறது. ODD-EVEN திட்டம் வாகன புகைக்கு தீர்வாகாது.

தீர்வு: பொது போக்குவரத்தை பயன்படுத்தி பெருவாரியான மக்களை ஊக்குவிக்க வேண்டும். டெல்லியை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டை போல் அங்கு கடைசி இடங்களுக்கு வரை சென்றடைய போக்குவரத்து என்பது இல்லை. ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று மெட்ரொ அல்லது அரசு பேருந்தில் பயணித்தாலும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல கடைசி 2 - 3 மீட்டர்கள் ஆட்டோவோ, தனியார் டாக்சியோ தான் பிடிக்க வேண்டும்.

மக்கள் சொந்த வாகனத்தில் செல்ல இது ஒரு முக்கிய காரணம் பொது போக்குவரத்தில் சாத்தியப்படுத்த வேண்டும். பாதசாரிகள் இடையூறு இல்லாமல் நடந்து செல்ல நடை பாதைகளை சாலைகளின் இரு புறமும் அமைத்து பராமரிக்க வேண்டும், சைக்கில் ஓட்டுபவர்களுக்கென தனி வழித்தடம் அமைக்க வேண்டும், சாலைகளை நவீனப்படுத்த வேண்டும், பொது போக்குவரத்து கட்டணங்களை குறைக்க வேண்டும், அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும். இது போன்ற ஏற்பாடுகள் செய்வதின் மூலம் மக்களின் சொந்த வாகன பயன்பாட்டினை குறைக்கலாம்.

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!

2. அனல் மின்சாரங்களில் இருந்து வரும் காற்று மாசு:

ஒரு 500MW அனல் மின் நிலையத்தில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு 105டன் SO2 , 24டன் NO2, 2.5டன் குறிப்பிட்ட மீட்டஎ மற்றும் 3500 சாம்பல் ஆகிய காற்று மாசுகள் காற்றில் வெளியேறுகிறது. டெல்லி என்.சி.ஆர் பகுதிகளில் மட்டும் மொத்தமாக 13.2GW மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய 40க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்கள் செயல் பாட்டில் உள்ளன. இவை அனைத்தையும் மூடிவிட்டு மையப்படுத்தப்படாத வளங்குன்றா சக்தியை (Decentralized Renewable Energy) நோக்கி டெல்லி அரசாங்கம் நகர்வது காற்று மாசை குறைக்க பெருமளவில் உதவும்.

3. குப்பைகளை எரிப்பது :

இந்தியா முழுவதிலும் திடக்கழிவு மேலாண்மை என்று துறைக்கு பெயர் மட்டும் இருக்கிறதே தவிர மேலாண்மை என்று எதுவும் நடக்கவில்லை. திடக்கழிவை பிரித்தெடுக்கும் (Collection-Segregation) முறையை கடின முயற்சி செய்து டெல்லியில் அமல்படுத்துவத்தின் மூலமும் பிரித்தெடுத்தவைகளை மறுபயன்பாடு-சுழற்சி (Reuse-Recycle) செய்வதன் மூலமும் குப்பைகளை எரிப்பதை பெரியளவிற்கு குறைக்கலாம்.

4. விவசாயிகள் எரிக்கும் விவசாய கழிவுகள்:

விவசாயிகள் விவசாய கழிவுகளை அகற்ற 20 கிராமத்திற்கு ஒன்று என்ற அளவில் அதை மாற்று பயன்பாடிற்காக நிலையத்தை அமைக்கலாம்.

5. நகர திட்டமிடுதல் (City Planning) :

பெரிய நகரகங்களுக்கும் அதன் துணை நகரங்களுக்கும் நகர திட்டமிடுதால் மிக முக்கியமான ஒன்று. வளர்ந்த நாடுகளில் நகரத்தை திட்டமிடும் போதே அதன் வானிலை நிலைமைகள் (Meteorological Conditions), புவியியல் நிலைமைகள் (Geographical Conditions), எதிர்பார்க்கப்படும் மாசு அளவு (expected Pollution), வாகனங்களினால் ஏற்படும் மாசு ஆகியவற்றை கணக்கில் கொண்டு அந்த நகரத்தை உருவாக்குகிறார்கள்.

இதனுடன் சேர்த்து பருவநிலைமாற்றமும் ஒரு காரணியாக நாம் வைத்துக்கொண்டு இந்தியாவில் பெரிய நகரங்களையும் அதன் துணை நகரங்களையும் திட்டமிட்டு மாற்றி அமைக்க வேண்டும்.

டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணமா?: உண்மையை மறைக்கும் அரசு - குற்றம்சாட்டும் சூழலியலாளர்கள்!

6. மண்டலங்களை வகைப்படுத்துதல் (Zone Classification);சீரான நகர வளர்ச்சிக்கு மண்டலங்களை வகைப்படுத்துப் படுத்தும் சட்டம் (Zoning Law) மிக முக்கியம். குடியிருப்பு, தொழில்துறை, வனிகம் போன்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் என பிரித்து மண்டலங்களை வகைப்படுத்துதலுடன் டெல்லி போன்ற நகரங்களை சீர் படுத்த வேண்டும்.

இது பெயர் அளவில் நடைமுறையில் இருந்தாலும் பல சமயங்களில் விதிகள் தளரத்தப்பட்டு மீறப்படுகிறது. இதை டெல்லி மற்றும் அதன் துணை நகரங்களில் இன்னும் சரியாக நடைமுறை படுத்த வேண்டும்.

7. பசுமை பூங்கா (Lung Spaces):

டெல்லி நகரத்தின் அனைத்து பகுதிகளில் ஆங்காங்கே பசுமை பூங்காக்களும் தோட்டங்களும் அமைப்பது மூலமாக அவை நுரையீரலாக செயல்பட்டு காற்று மாசை குறைக்க உதவும். இது போன்ற பிரச்சனையின் மையப்புள்ளியை அணுகக்கூடிய தொலைநோக்கு கொண்ட இதை போன்ற இன்னும் பல நீண்டகால திட்டங்களே டெல்லி காற்று மாசை குறைத்து இந்தியாவின் தலை நகரை மக்கள் வாழ தகுந்த இடமாக மாற்ற உதவும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories