இந்தியா

அயோத்தி வழக்கு: “எங்களால் சமரசத் தீர்வு காண முடியவில்லை” கைவிரித்தது மத்தியஸ்தர் குழு!

அயோத்தி விவகாரத்தில் சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்ததாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 6ந் தேதி முதல் இவ்வழக்கு தினமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அயோத்தி வழக்கு: “எங்களால் சமரசத் தீர்வு காண முடியவில்லை” கைவிரித்தது மத்தியஸ்தர் குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தி நில உரிமை குறித்த வழக்கை விசாரித்து வருகிறது.

கடந்த மார்ச் 8ம் தேதி அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண மத்தியஸ்தர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞரும், சமரசவாதியுமான ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. அயோத்தி விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினர் மத்தியிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது அந்த குழு.

இதனிடையே மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்தியஸ்தர் குழு மேற்கொண்ட சமரச முயற்சியில் தீர்வு காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அயோத்தி வழக்கை ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்துள்ளார். வரும் 6-ந் தேதி முதல் வழக்கு தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கோகாய் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories