இந்தியா

உன்னாவோ: "எங்கள் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம்" கேள்விகளால் துளைத்தெடுத்த பள்ளி மாணவி- திகைத்த போலிஸார்!

பெண் பாதுகாப்பு குறித்து பாடமெடுக்க வந்த போலீசாருக்கு உன்னாவோ சம்பவத்தை முன்வைத்து கேள்வி கேட்டு துளைத்தெடுத்த பள்ளி மாணவியின் பேச்சு வைரலாகியுள்ளது.

உன்னாவோ: "எங்கள் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம்" கேள்விகளால் துளைத்தெடுத்த பள்ளி மாணவி- திகைத்த போலிஸார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெண்களுக்கு எதிரான ஏராளமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கும் வேளையில், பெண் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய மக்களின் பிரதிநிதியாக உள்ள பா.ஜ.கவின் எம்.எல்.ஏ ஒருவரே உத்தர பிரதேசத்தின் உன்னாவோவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும், பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

அதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சமீபத்தில் ரேபரேலி அருகே உன்னாவோ சிறுமி, அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில், இரண்டு உறவினர்கள் பலியாகினர். சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். வழக்கறிஞரும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து திட்டமிடப்பட்ட கொலை முயற்சியா என விசாரிக்க பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உன்னாவோ: "எங்கள் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம்" கேள்விகளால் துளைத்தெடுத்த பள்ளி மாணவி- திகைத்த போலிஸார்!

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காவல் துறை உயர் அதிகார்கள், மாணவிகளிடையே போராடுவது தொடர்பாகவும், போராடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அறிவுறுத்தல்களை கொடுத்தனர்.

காவல் துறையினரின் அந்த பேச்சைக் கேட்ட மாணவி ஒருவர், உன்னாவ் சிறுமிக்கு நடந்த கொடுமையை சுட்டிக் கேட்டி சரமாரிக் கேள்விகளை எழுப்பினார். மாணவியின் அந்த பேச்சு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கேள்வி எழுப்பிய மாணவி பேசியதாவது ” 18 வயதுடைய பெண்ணை பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அப்பெண்ணின் தந்தை உயிரிழந்திருக்கிறார். அவரது மரணம் விபத்தினால் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். பாதிக்கப்பட்ட பெண் தனது தாய், உறவினர், வழக்கறிஞருடன் காரில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளாகினர்.

உன்னாவோ: "எங்கள் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம்" கேள்விகளால் துளைத்தெடுத்த பள்ளி மாணவி- திகைத்த போலிஸார்!

அதில், உடன் பயணம் செய்த அவரது உறவினர்கள் மரணித்திருக்கிறார்கள். கார் மீது மோதிய லாரியின் நம்பர் ப்ளேட் கருப்பு மையால் மறைக்கப்பட்டுள்ளது.” என்றவுடன் சக மாணவர்கள் பலத்த கரகோஷங்களை எழுப்பினர்.

தைரியத்துடன் தொடர்ந்து பேசிய அவர், ” ஒரு சாதாரண மனிதனுக்கு எதிராக எங்களால் போராட முடியும். ஆனால், பணபலம், அதிகார பலம் படைத்த ஒரு அரசியல்வாதியை எதிர்த்து எங்களால் எப்படி போராட முடியும் என்று நினைக்கிறீர்கள்?. அப்படி எதிர்த்து போராடினால் எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கு யார் உத்தரவாதம். அவ்வாறு அரசியல்வாதிகளுக்கு எதிராக நாங்கள் போராடினாலும் கூட எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை, அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் அதனால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. ஏராளமான நிர்பயாக்களை பார்த்திருக்கிறோம், எங்களால் போராட முடியும். ஆனால் அதற்கான நீதி கிடைக்குமா? அவ்வாறு போராடும் எனக்கு பாதுகாப்பு கிடைக்குமா?” என சரமாரியாக கேள்விக்கணைகளை முன்வைத்தார் அந்த பள்ளி மாணவி.

பெண் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்க வந்த போலீசார் மாணவியிடம் பாடம் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவியின் சரளமான கேள்விகள் எவற்றுக்கும் பதிலளிக்க முடியாமல் போலீசார் திகைத்துப்போனார்.

banner

Related Stories

Related Stories