இந்தியா

9 மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: தமிழை திட்டமிட்டு மறைக்கிறதா பா.ஜ.க.. துணைபோகிறதா நீதித்துறை ?

உச்சநீதிமன்றத்தின் 100 தீர்ப்புகள் 9 மொழிகளில் வெளியிட்டபட்டது. ஆனால் அதில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 மொழிகளில் உச்சநீதிமன்ற  தீர்ப்புகள்: தமிழை திட்டமிட்டு மறைக்கிறதா பா.ஜ.க.. துணைபோகிறதா நீதித்துறை ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் ஆங்கிலம் அல்லது நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியில் தீர்ப்புகளை வழங்குகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தவிர, உச்சநீதிமன்றம் தனது அதிகாரப்பூர்வ வலைதளபக்கத்தில் தீர்ப்புகளை இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் தீர்ப்புகளை வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது.

அதன்படி, மொழிபெயர்க்கப்பட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்றத்தின் “In House” மின்னணு மென்பொருள் பக்கத்தில் பதிவு செய்ய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுமதி வழங்கியுள்ளார். இந்த திட்டத்தின்படி உச்ச நீதிமன்றத்தின் 100 தீர்ப்புகள் 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற கூடுதல் கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இந்த மொழிபெயர்ப்பு தீர்ப்பு நகல்களை வெளியிட்டார். அதனை குடியரசு தலைவர் பெற்றுக்கொண்டார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தற்போது 9 மொழிகளில் தீர்ப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத்காகத் தெரிவித்தார். கணினி மென்பொருள்கள் தயாரான உடன் அனைத்து மாநில மொழிகளிலும் தீர்ப்புகளை வெளியிட முடியும் என்று கூறினார்.

ஆங்கிலம் தெரியாக மனுதாரர்களுக்கு ஆங்கிலத்தில் தீர்ப்புகளை வழங்குவது மிகப் பெரிய அநீதி என்று , அந்த நிலைமை படிப்படியாக மாறும் என்று தெரிவித்தார்.

9 மொழிகளில் உச்சநீதிமன்ற  தீர்ப்புகள்: தமிழை திட்டமிட்டு மறைக்கிறதா பா.ஜ.க.. துணைபோகிறதா நீதித்துறை ?

முன்னதாக தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானாலும் தமிழ் மொழியில் தீர்ப்புகளைப் பெறமுடியாத நிலைமை உள்ளது. இந்தியைத் திணிக்க முயலும் பா.ஜ.க அரசைப் போல தமிழ் மொழியை நீதிமன்றம் புறக்கணிக்க முடிவு செய்துவிட்டதா? எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்கள்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் தி.மு.க கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற தி.மு.க தலைவர் டி.ஆர்.பாலு, தலைமை நீதிபதியை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். தி.மு.க.வின் கோரிக்கையை பரிசீலித்து தமிழிலும் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உறுதியளித்துள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

எளியமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்த நீதிமன்றத்திற்கு தமிழகத்தில் எளியமக்கள் இருப்பது தெரியாமல் போனது வருந்தத்தக்க விஷயம் தான். தமிழகத்தில் இருந்து தொடர்ச்சியாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன.

பல நேரங்களில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சாராம்சம் புரியாமல் தமிழகத்தில் திட்டங்கள் கூட நிறுத்தி வைக்கப்பட்ட அவலம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தமிழ் மொழியிலும் தீர்ப்புகளை வெளியிடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories