இந்தியா

புதிய கல்விக்கொள்கை வரைவின் மீதான கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு !

புதிய கல்விக்கொள்கை வரைவின் மீதான கருத்துக்களை தெரிவிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிய கல்விக்கொள்கை வரைவின் மீதான கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மே மாதம் 31ம் தேதி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் புதிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மும்மொழி கல்வி திட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

வரைவின் மீது பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் கோரினார். இதையடுத்து, பொதுமக்கள் கருத்துக்கூற வசதியாக கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories