இந்தியா

“மோடி ஆட்சி என்பது சூப்பர் எமெர்ஜென்சி” - மம்தா பானர்ஜி கடும் தாக்கு!

நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தி 44 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாகவே மோடி அரசின் கீழ் சூப்பர் எமெர்ஜென்சியில்தான் உள்ளோம் என மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“மோடி ஆட்சி என்பது சூப்பர் எமெர்ஜென்சி” - மம்தா பானர்ஜி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாட்டில் அவசர நிலை கொண்டுவரப்பட்டது. சுமார் 21 மாதங்களுக்கு நடைமுறையில் இருந்த அவசரநிலை போடப்பட்டு 44 ஆண்டுகள் கடந்துள்ளன.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “எமெர்ஜென்சி கொண்டுவரப்பட்டு 44 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக மோடியின் ஆட்சியில் சூப்பர் எமெர்ஜென்சி தான் நிலவியது என்று தெரிவித்துள்ளார்”.

மேலும், இதுபோன்ற வரலாறுகளில் இருந்து நாம் பாடம் கற்று நாட்டின் ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories