இந்தியா

டிவி சேனல் விவாதங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க தடை!

செய்தி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் கமிட்டி தடை விதித்துள்ளது.

டிவி சேனல் விவாதங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க தடை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் பா.ஜ.க வென்றதால், அக்கட்சியே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதற்கான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக செய்திகள் ஊடகங்களில் உலா வருவதால் அக்கட்சியின் மேலிடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, காங்கிரஸ் கமிட்டி குறித்த சர்ச்சை மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு மாதத்துக்கு செய்தி சேனல் விவாதங்களில் பங்கேற்க அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்டுப்பாடு விதித்துள்ளது.

மேலும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, ஒரு மாதத்திற்கு காங்கிரஸாரை விவாதத்திற்கு அழைக்க வேண்டாம் என ஊடகங்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories