இந்தியா

இதுவரை இல்லாத அளவில் அதிக பெண் எம்.பி-களை காணப்போகும் மக்களவை!

இந்தத் தேர்தலில் 78 பெண்கள் வெற்றி பெற்று எம்.பி-களாக பதவியேற்க உள்ளனர்.

இதுவரை இல்லாத அளவில் அதிக பெண் எம்.பி-களை காணப்போகும் மக்களவை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 78 பெண்கள் வெற்றி பெற்று எம்.பி-களாக பதவியேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 78 பெண் எம்.பி-கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில் 64 பெண் எம்.பி-கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி-களாக பதவியேற்க இருக்கின்றனர்.

தமிழகத்திலிருந்து 3 பெண் எம்.பி-கள் மக்களவைக்குச் செல்லவிருக்கிறார்கள். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி, தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன், கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி ஆகிய மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories