இந்தியா

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான சுனில் அரோராவின் ஆலோசனை ரத்து!

தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், மாநில தலமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்த இருந்தார்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான சுனில் அரோராவின் ஆலோசனை ரத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவு மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மே 19ம் தேதியோடு நடந்து முடிந்தன.

இதனையடுத்து, நாளை நாடுமுழுவதும் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான சுனில் அரோராவின் ஆலோசனை ரத்து!

இதனையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்த இருந்தார்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்து 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் சுனில் அரோரா நடந்த இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories