இந்தியா

மேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு நாளை மறு வாக்குப்பதிவு !

மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள உத்தர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது

மேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு நாளை மறு வாக்குப்பதிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவுகள் கடந்த மே 19ம் தேதி நடந்து முடிவடைந்தது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள உத்தர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடிக்கு மட்டும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்பட இருக்கிறது. எனவே இதற்காக வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 123வது வாக்குச்சாவடிக்கும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

banner

Related Stories

Related Stories