திமுக அரசு

"வாக்காளர்களுக்கு G-Pay, PhonePe, Paytm மூலம் அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா” : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

“வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் அட்டை மற்றும் செல்பேசி எண் தகவல்களை பெறும் அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரி தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார்.

"வாக்காளர்களுக்கு G-Pay, PhonePe, Paytm மூலம் அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா” : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் அட்டை மற்றும் செல்பேசி எண் தகவல்களை பெறும் அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!" எனக் கோரி தமிழகத் தேர்தல் தலைமை தேர்தல் அலுவலரிடம் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி புகார் மனு அளித்துள்ளார்.

தி.மு.கழகத்தின் சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும், தமிழ்நாடு தமிழக தலைமை தேர்தல் அலுவலருக்கும் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார்.

அதனை தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ஆர்.நீலகண்டன் மற்றும் ஜெ.பச்சையப்பன் ஆகியோர் தமிழக இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆனந்த் அவர்களிடம் நேரில் கொடுத்தனர்.

அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாக்காளர் வீட்டிற்கும் சென்று அவர்களது வாக்காளர் அட்டை நகல்களையும் - அவர்களின் செல்பேசி எண்களையும் பெற்று வருகிறார்கள், குறிப்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், நேற்று இரவு பல்வேறு இடங்களில் அ.தி.மு.கவினர் வாக்காளர்களிடம் இருந்து அவர்களது அடையாள அட்டை விவரங்களையும்; அவர்களது செல்பேசி எண்களையும் பெற்றுவருகின்றனர்.

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன்பே, பே-டிஎம் ஆன்லைன் மூலமாக பணப்பட்டுவாடா செய்வதற்காக அவர்களது தொலைபேசி எண்களின் விவரங்கள் அ.தி.மு.கவினரால் பெறப்பட்டு வருகின்றன.

மேலும் தொகுதிக்கு வெளியே வாக்காளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கும் அ.தி.மு.க முயற்சி செய்து வருகிறது.

இதுபோன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தொகுதிகளில் அ.தி.மு.கவினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை மற்றும் சோதனைச்சாவடிகளில், ஒருவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றுவதற்காக மட்டுமே சோதனை நடத்துவதோடு அல்லாமல் அவர்களிடம் வாக்காளர்களின் அடையாள அட்டை தகவல்கள் மற்றும் அவர்களது செல்பேசி எண் தகவல்கள் இருந்தால் அதனையும் கைப்பற்றவேண்டும் என்று அவர்களுக்கு உரிய வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அ.தி.மு.கவினரின் இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளை தடுக்காவிட்டால், அது நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை பாதிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இந்த புகார் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

"வாக்காளர்களுக்கு G-Pay, PhonePe, Paytm மூலம் அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா” : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இதேபோல, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.கவினர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்பாக தேர்தல் அலுவலர் மற்றும் பார்வையாளரிடம் சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் புகார் அளித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று (31.3.2021) இரவு முதல் அ.தி.மு.கவினர் பல்வேறு இடங்களில் வாக்காளர்களின் அடையாள அட்டை நகல்களையும்- அவர்களின் செல்பேசி எண்ககளின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் - சட்டவிரோத பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என்றும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொது முகவரான சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மற்றும் தேர்தல் பார்வையாளரிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன்பே, பே-டிஎம் ஆன்லைன் மூலமாக பணப்பட்டுவாடா செய்வதற்காக அவர்களது தொலைபேசி எண்களின் விவரங்கள் அ.தி.மு.கவினரால் பெறப்பட்டு வருகின்றன.

மேலும் தொகுதிக்கு வெளியே வாக்காளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கும் அதிமுக முயற்சி செய்து வருகிறது.

அ.தி.மு.கவினரின் இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளை தடுக்காவிட்டால், அது நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை பாதிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, இந்த புகார் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories