தேர்தல் 2024

பிரசாரம் செய்ய வந்த பாஜக வேட்பாளர் விரட்டியடிப்பு - பஞ்சாபில் தொடரும் விவசாயிகள் போராட்டம் !

பிரசாரம் செய்ய வந்த பாஜக வேட்பாளர் விரட்டியடிப்பு - பஞ்சாபில் தொடரும் விவசாயிகள் போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது. விவசாயிகள் நலன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள் நலன், கல்வி முன்னேற்றம் என பல வாக்குறுதிகளை கொடுத்து, அதனை 'ஜூம்லா'-வாக செய்து வருகிறது பாஜக அரசு. மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக பல திட்டங்களை அறிவித்தது.

அதில் ஒன்றுதான், 3 வேளாண் சட்டம். இதனை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். எனினும் அதனை கண்டுகொள்ளாத பாஜக அரசு, அவர்கள் மீது வன்முறையை ஏவியது. விவசாயிகளுக்கு முறையான விளைப் பொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காததால் நஷ்டமடையும் விவசாயிகள், தாங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

பிரசாரம் செய்ய வந்த பாஜக வேட்பாளர் விரட்டியடிப்பு - பஞ்சாபில் தொடரும் விவசாயிகள் போராட்டம் !

விவசாயிகள் தற்கொலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் கடனை தள்ளுபடி செய்யாமல், பெரிய தொழிலதிபர்களின் கோடி கணக்கிலான கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. அண்மையில் கூட குறைந்தபட்ச ஆதார விலையை கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் டெல்லி முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டனர்.

அப்போது பாஜக அரசின் பேச்சை கேட்டு, போலிசார் நடத்திய தாக்குதலில், இளம் விவசாயி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். எனினும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விடாமல் தொடர்ந்து வந்த நிலையில், பாஜக அரசு அதனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் தவிர்த்துக்கொண்டே வருகிறது. இதன் எதிரொலியாக பாஜக வேட்பாளர்களுக்கு பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பிரசாரம் செய்ய வந்த பாஜக வேட்பாளர் விரட்டியடிப்பு - பஞ்சாபில் தொடரும் விவசாயிகள் போராட்டம் !

குறிப்பாக விவசாயிகள் அதிகமாக போராட்டம் நடத்தும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாஜகவுக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று பஞ்சாப் மாநிலத்தின் அம்பாலா தொகுதி பாஜக வேட்பாளர் பந்தோ கட்டாரியா படோலி கிராமத்தில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்.

அப்போது அங்கு அவரை முற்றுகையிட்ட விவசாயிகள், தொடர் முழக்கமிட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதனால் அங்கு பிரச்சாரம் செய்ய முடியாமல் பிரச்சாரத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்போடு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் பாஜக வேட்பாளர் பந்தோ கட்டாரியா.

banner

Related Stories

Related Stories