தி.மு.க

மு.க.ஸ்டாலின் உட்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து : சென்னை ஐகோர்ட் அதிரடி!

சட்டமன்றத்துக்குள் குட்கா பொருட்களை கொண்டு வந்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் விடுத்திருந்த உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

File image : MK Stalin
File image : MK Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக சட்டசபை கூட்டத் தொடரின் போது பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சென்னையில் தி.மு.க மேற்கொண்ட கள ஆய்வில் பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக அதை சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் குட்கா பொருட்களை காட்டி அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர். அதில் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மு.க.ஸ்டாலின் உட்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து : சென்னை ஐகோர்ட் அதிரடி!

சட்டசபை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்கிறார்கள். இதை நிரூபித்த தி.மு.க உறுப்பினர்களை உரிமை குழு நோட்டீஸ் என்ற பெயரில் தகுதி நீக்கம் செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர திட்டமிட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தி.மு.க எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கானது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வாதங்கள் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மற்றும் N R இளங்கோ வாதிடுகையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ'க்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் தி.மு.க மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை 2017 பிப்ரவரி 18ம் தேதியே தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக முடிவெடுக்காத நிலையில் தற்போதும் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறுவது தவறு.

சபாநாயகரின் அனுமதி பெற்றே மு.க.ஸ்டாலின், குட்கா விவகாரத்தை எழுப்பியதாகவும், மானியக் கோரிக்கை நடவடிக்கைகளில் அவர் குறுக்கீடு செய்யவில்லை எனவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ஏ பி சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு சட்டப்பேரவை உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கினார்கள்.

banner

Related Stories

Related Stories