தி.மு.க

தென்பெண்ணையாற்றில் கர்நாடக அரசின் திட்டங்களை தடுக்காத அ.தி.மு.க அரசு; தி.மு.க இன்று கண்டன போராட்டம்!

தமிழக உரிமையை பாதிக்கும் தென்பெண்ணை ஆற்றுத் திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வியை கண்டுள்ள அ.தி.மு.க அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

தென்பெண்ணையாற்றில் கர்நாடக அரசின் திட்டங்களை தடுக்காத அ.தி.மு.க அரசு;  தி.மு.க இன்று கண்டன போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள அணை உள்ளிட்ட 5 திட்டப்பணிகளுக்கு தடை விதிக்க எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை என்ற ரீதியில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தமிழக உரிமையை பாதிக்கும் தென்பெண்ணையாற்றுத் திட்டங்களில் தடுத்து நிறுத்துவதில் தோல்வியைக் கண்டுள்ள அ.தி.மு.க அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களின் தலைநகரங்களில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்றைய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என திரளானோர் பங்கேற்கவிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories