சினிமா

“இதை அவரை விட நா நல்லா பண்ணிருப்பேன்..” - ராஷ்மிகாவை சுட்டிக்காட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சு !

ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால் அவரை விட தான் நன்றாக நடித்திருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“இதை அவரை விட நா நல்லா பண்ணிருப்பேன்..” - ராஷ்மிகாவை சுட்டிக்காட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் தான் 'புஷ்பா - தி ரைஸ்'. கடந்த 2021-ல் வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

“இதை அவரை விட நா நல்லா பண்ணிருப்பேன்..” - ராஷ்மிகாவை சுட்டிக்காட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சு !

இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா 'ஸ்ரீவள்ளி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் குவித்தது. இதற்கு பலரும் ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர்.

“இதை அவரை விட நா நல்லா பண்ணிருப்பேன்..” - ராஷ்மிகாவை சுட்டிக்காட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சு !

இந்த நிலையில், இந்த கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால், ராஷ்மிகாவை விட மேலும் நன்றாக நடித்திருப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் 'ஃபர்ஹானா'. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று தற்போது திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.

“இதை அவரை விட நா நல்லா பண்ணிருப்பேன்..” - ராஷ்மிகாவை சுட்டிக்காட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சு !

இந்த சூழலில் அண்மையில் இவர் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனக்கு நல்ல தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக தெரிவித்த இவர், விஜய் தேவரகொண்டாவுடன் தான் நடித்த 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' எனும் தெலுங்கு திரைப்படம் நினைத்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

“இதை அவரை விட நா நல்லா பண்ணிருப்பேன்..” - ராஷ்மிகாவை சுட்டிக்காட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சு !
Silverscreen Inc.

தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் நடித்திருப்பேன் என்றார். மேலும் அந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மிகவும் அருமையாக நடித்திருப்பார்; இருப்பினும் எனக்கு கிடைத்திருந்தால் ராஷ்மிகாவைவிட மிகவும் அருமையாக நடித்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories