சினிமா

“நான்தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி..” - கணவரிடமே நேக்காக ஏமாற்றிய பணிப்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி !

“நான்தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி..” - கணவரிடமே நேக்காக ஏமாற்றிய பணிப்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்துக்கு இரண்டு ஐஸ்வர்யா, செளந்தர்யா என்ற மகள்கள் உள்ளனர். இதில் இருவருக்கும் திருமணமான நிலையில், மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்துடன் சென்னை போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் ஐஸ்வர்யா, தனது வீட்டிலுள்ள நகை வைத்திருக்கும் லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 100 சவரன் தங்க, வைர நகைகள் காணாமல் போயுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

“நான்தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி..” - கணவரிடமே நேக்காக ஏமாற்றிய பணிப்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி !

அதில் தான் வைத்திருக்கும் டந்த 2019-ல் தனது தங்கையின் திருமணத்துக்கு பின்னர் தனது நகைகளை லாக்கரில் பூட்டி வைத்ததாகவும், பின்னர் கடந்த மாதம் அதனை திறந்து பார்த்தபோது நகைகள் எதுவும் இல்லாமல் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு தான் அந்த லாகாரின் சாவி தன் வீட்டில் இருக்கும் வேலை செய்பவர்களுக்கும் தெரியும் என்றும், தான் வீட்டில் இல்லாத நேரங்களில் அவர்கள் தனது அப்பார்ட்மென்ட்டுக்கு செல்வார்கள் என்றும் குறிப்பிட்டு தன் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள் ஈஸ்வரி, லட்சுமி மற்றும் கார் ஒட்டுநர் வெங்கட் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டார்.

“நான்தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி..” - கணவரிடமே நேக்காக ஏமாற்றிய பணிப்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி !

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டு வேலையாட்களை விசாரித்தபோது, அதில் பணிப்பெண் ஈஸ்வரிதான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் திருடிய நகைகளை வைத்து அவருக்கு சொந்தமாக நிலம் ஒன்றை வாங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸ் தீவிரமாக விசாரித்தனர். அப்போது ஈஸ்வரி பல வருடங்களாக வேலை ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது 2019-ம் முதலே லாக்கரில் இருந்த நகைகளைத் சிறுகச் சிறுக திருடி வந்த ஈஸ்வரி, அந்த மொத்த நகைகளையும் விற்று தனது கணவர் அங்கமுத்துவின் வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார். மேலும் அந்த பணத்தை வைத்து சொந்தமாக நிலம் வாங்கியுள்ளார். அதோடு அவருக்கு என்று நகைகளை வாங்கியதோடு, கொஞ்ச பணத்தையும் கைவசம் வைத்திருந்துள்ளார்.

“நான்தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி..” - கணவரிடமே நேக்காக ஏமாற்றிய பணிப்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி !

இந்த திருட்டுக்கு ஓட்டுநர் வெங்கட்டும் துணையாக இருந்துள்ளார். திருடிய நகைக்களை விற்று நிலம் வாங்கியதோடு மட்டுமின்றி, துரைப்பாக்கத்தில் செக்ரடேரியட் காலனி, 6 வது குறுக்கு தெருவில் சொந்தமாக வீடு வாங்கி அதனை வாடகைக்கும் விட்டு வந்துள்ளார். மேலும் தொடர்ந்து விசாரிக்கையில் அந்த வீடு, அதில் உள்ள மின்கட்டண அட்டை உள்ளிட்டவையும் ஈஸ்வரியின் பெயரில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஓட்டுநருக்கு ரூ.9 லட்சத்தை கொடுத்துள்ளார் ஈஸ்வரி.

“நான்தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி..” - கணவரிடமே நேக்காக ஏமாற்றிய பணிப்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி !

இந்த சம்பவத்தில் ஈஸ்வரியின் கணவர் அங்கமுத்துவுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கையில், கணவருக்கே பட்டையடிக்கப்பட்டுள்ள சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது துரைப்பாக்கத்தில் ஈஸ்வரி வாங்கிய வீடு குறித்து கணவரிடம் ஈஸ்வரி பகிரங்கமாக பொய் கூறியுள்ளார்.

driver venkatesan
driver venkatesan

அதாவது, தனது கணவர் அங்கமுத்துவிடம் தான் ஐஸ்வர்யாவின் பினாமி என்றும், இந்த வீடு ஐஸ்வர்யா தனது பெயரில் (ஈஸ்வரி) வாங்கியுள்ளதாகவும், இதனை வெளியில் வேறு யாரிடமும் கூறக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். இதனை முழுமையாக நம்பிய அங்கமுத்துவும் இதனை வெளியில் யாரிடமும் கூறவில்லை என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“நான்தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி..” - கணவரிடமே நேக்காக ஏமாற்றிய பணிப்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி !

இதையடுத்து ஓட்டுநர் வெங்கட்டிடம் இருந்து பணத்தை மீட்கும் பணியிலும், ஈஸ்வரியிடம் இருந்து மீதமுள்ள நகைகள், பணத்தை மீட்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பணிபுரிந்த இடத்தை மட்டுமின்றி, சொந்த குடும்பத்தையே ஈஸ்வரி ஏமாற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நான்தான் ஐஸ்வர்யா ரஜினிக்கு பினாமி..” - கணவரிடமே நேக்காக ஏமாற்றிய பணிப்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி !

ஐஸ்வர்யாவின் லாக்கரானது இதுவரை சுமார் 3 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 2021 வரை, செயின்ட் மேரி சாலையில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்த இந்த லாக்கர், பின்னர் சிஐடி காலனியில் நடிகர் தனுஷுடன் அவர் பகிர்ந்து கொண்ட குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மீண்டும் செப்டம்பர் 2021 இல் செயின்ட் மேரி சாலை அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 9, 2022 அன்று, லாக்கர் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories