சினிமா

தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்ட மாணவர்.. அதே மேடையில் நோஸ்கட் செய்த நடிகை அபர்ணா பாலமுரளி!

கேரளாவில் கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்ட மாணவர்.. அதே மேடையில் நோஸ்கட் செய்த நடிகை அபர்ணா பாலமுரளி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் தமிழில் நடித்த 'சூரரைப்போற்று' படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். இதையடுத்து தமிழ், மலையாளம் படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இவர் நடித்துள்ள தங்கம் என்ற மலையாளப் படம் வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் 'தங்கம்' படத்தின் புரமோஷன் நடைபெற்றது. இதில் நடிகை அபர்ணா பாலமுரளி, படத்தின் இயக்குநர் சஹீத் அராபத், நடிகர் வினித் ஸ்ரீனிவாசன் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது, மேடைக்கு வந்த கல்லூரி மாணவர் ஒருவர் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு பூ கொடுத்தார். பிறகு உடனே அந்த மாணவர் நடிகை தோள்மீது கைபோட முயன்றார். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அபர்ணா பாலமுரளி அதிர்ச்சியடைந்து மாணவர் பிடியில் இருந்து தப்பி தனது இருக்கையில் அமர்ந்தார்.மாணவரின் இந்த அத்துமீறலை கண்டு படக்குவினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சிறிதுநேரம் கழித்து, மாணவர் மீண்டும் மேடைக்கு வந்து தான் நடந்து கொண்டதற்கு மன்னிப்புகேட்டுவிட்டு, 'நான் அவரது ரசிகர் என்பதால் அப்படி நடந்து கொண்டேன்' என கூறிவிட்டு மீண்டும் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு கைக்கொடுக்க முயன்றார். ஆனால் அவர் அந்த மாணவருக்கு கைக்கொடுக்க மறுத்துவிட்டார். பிறகு அந்த மாணவர் மேடையில் இருந்து கீழே சென்றார்.

தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்ட மாணவர்.. அதே மேடையில் நோஸ்கட் செய்த நடிகை அபர்ணா பாலமுரளி!

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும், "ஒரு பெண்ணின் உடலை அவரது அனுமதி இன்றி தொடுவது தவறு. அவருக்குத் தொல்லை கொடுத்தபிறகு மன்னிப்பு கேட்பது ஏற்கமுடியாது" என அந்த மாணவரின் நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. மேலும் இப்படி நடக்கும்போது தடுக்க முன்வராத கல்லூரி நிர்வாகத்தின் மீதும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories