சினிமா

பொன்னியின் செல்வன் வசூல் : "என்னை யாராச்சும் கிள்ளி கனவு இல்லனு சொல்லுங்க.." - வைரலாகும் விக்ரமின் பதிவு!

பொன்னியின் செல்வன் படம் வெளியாகி 50 நாள் திரையரங்கில் வெற்றிநடை போடும் நிலையில், தற்போது உலகளவில் ரூ.500 கோடி தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது.

பொன்னியின் செல்வன் வசூல் : "என்னை யாராச்சும் கிள்ளி கனவு இல்லனு சொல்லுங்க.." - வைரலாகும் விக்ரமின் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொன்னியின் செல்வன் படம் வெளியாகி 50 நாள் திரையரங்கில் வெற்றிநடை போடும் நிலையில், தற்போது உலகளவில் ரூ.500 கோடி தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்'. உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிய இந்த படம் இந்தியாவில் பான் இந்தியா படமாக வெளியானது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், பார்த்திபன் என்று திரைபட்டாளமே நடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் வசூல் : "என்னை யாராச்சும் கிள்ளி கனவு இல்லனு சொல்லுங்க.." - வைரலாகும் விக்ரமின் பதிவு!

பிரபல தமிழ் நாவல் எழுத்தாளரான கல்கியின் உருவாக்கத்தில் உருவான இந்த கதையை தமிழில் பல திரை கலைஞர்கள் எடுக்க முயன்றனர். இந்த நிலையில் நீண்ட விடா முயற்சிக்கு பிறகு தற்போது மணிரத்னம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு விஷயங்களை செய்து வந்தனர்.

இந்த நிலையில் படம் வெளியாகி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்கில் வெற்றிநடை போடுக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு சில படங்கள் வெளியான போதிலும் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் இந்த படம் திரையிடப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் வசூல் : "என்னை யாராச்சும் கிள்ளி கனவு இல்லனு சொல்லுங்க.." - வைரலாகும் விக்ரமின் பதிவு!

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தின் வசூலே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.400 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரூ.500 கோடி வசூல் சாதனை செய்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதுவும் 50 நாட்களில் 500 கோடியை தாண்டி வசூல் செய்து இந்தாண்டின் வெற்றிப்படமாக 'பொன்னியின் செல்வன்' திகழ்ந்துள்ளது.

பொன்னியின் செல்வன் வசூல் : "என்னை யாராச்சும் கிள்ளி கனவு இல்லனு சொல்லுங்க.." - வைரலாகும் விக்ரமின் பதிவு!

இந்த நிலையில் இது குறித்து நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பூரிப்புடன் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னை யாராவது கிள்ளி விட்டு, இது கனவு இல்லை என்று கூறுங்களேன்" என்று குறிப்பிட்டுள்ளார். விக்ரமின் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இது தற்போது திரை வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் வசூல் : "என்னை யாராச்சும் கிள்ளி கனவு இல்லனு சொல்லுங்க.." - வைரலாகும் விக்ரமின் பதிவு!

சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினர். அப்போது மெட்ராஸ் டாக்கீஸ் - லைகா சார்பில் 'கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை'-க்கு 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories