சினிமா

'உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை' - 'லவ் டுடே' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி !

'லவ் டுடே' படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

'உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை' - 'லவ் டுடே' பட  இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் 'லவ் டுடே'.

இந்த படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. வெளியான மூன்று நாட்களில் படம் கிட்டத்தட்ட ரூ.14 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை' - 'லவ் டுடே' பட  இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி !

'கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்க்கிறேன்..' என தலைப்பிடப்பட்டுள்ள அதில், "இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும், தியேட்டர் ஆக்கிரமிப்பும், அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை ஆனாலும், பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆவதையும், குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன். தமிழ்நாட்டிற்கு வெளியிலும் இதே நிலை இருக்கிறது (பெங்களூரு, கேரளா, மலேஷியா etc).

நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக, என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி. என்னை நம்பியதற்கு அகோரம் அவர்களுக்கு நன்றி.

'உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை' - 'லவ் டுடே' பட  இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி !

நீங்கள் சிரிப்பதையும், கொண்டாடுவதையும், தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. உங்களின் முகத்தில் மிளிரும் சந்தோஷமே எனக்கு சந்தோஷம். அதுவே நான் விரும்பியது, தியேட்டர்களில் சத்தமும், மகிழ்ச்சியான முகங்களும். நன்றி.

நீங்கள் என்னை நேசிப்பதையும், என்மீது அக்கறை கொள்வதையும், ஆதரவு அளிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும், மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதையும் மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்.

அபரித அன்புடன், பிரதீப் ரங்கநாதன்" என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories