சினிமா

நான்காவது படத்தை இயக்கத் தயாராகும் சி.வி.குமார்... அடுத்தடுத்த படங்களுக்கான கதைகள் ரெடி!

தனது இயக்கத்தில் நான்காவதாக உருவாகும் படம் பற்றி அறிவித்திருக்கிறார் சி.வி.குமார்.

நான்காவது படத்தை இயக்கத் தயாராகும் சி.வி.குமார்... அடுத்தடுத்த படங்களுக்கான கதைகள் ரெடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழில் அட்டகத்தி, பிட்ஸா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி எனப் பல படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இப்போதும் பல படங்களுகான தயாரிப்பு வேலைகளில் இருக்கிறார்.

இவர் இயக்குநராக அறிமுகமான படம் 2017ல் வெளியான `மாயவன்'. தொடர்ந்து `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தையும் இயக்கினார். இவர் இயக்கத்தில் உருவான மூன்றாவது 'கொற்றவை' பட ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்போது இவரது இயக்கத்தில் நான்காவதாக உருவாகும் படம் பற்றி அறிவித்திருக்கிறார்.

2017ல் வெளியான சந்தீப், லாவண்யா, ஜாக்கி ஷெரஃப் ஆகியோர் நடித்த `மாயவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தான் அடுத்து இயக்க இருக்கிறார். தற்போது அந்தப் படத்துக்கான கதை எழுதும் பணியில் இருக்கிறார்.

சமீபத்தில் தனது ட்விட்டரில் ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளித்தவர் `இன்று நேற்று நாளை 2' படத்தின் ஷூட்டிங் மே, முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

இதுபோக கொற்றவையின் அடுத்த இரண்டு பாகங்களையும் இயக்க இருக்கிறார், தயாரிப்பில் பீட்ஸா படத்தின் மூன்றாவது பாகமும் உருவாக இருக்கிறது.

எழுத்தாளர் தமிழ்மகனின் `நான் ரம்யாவாக இருக்கிறேன்', `ஆபரேஷன் நோவா', `வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' ஆகிய புத்தகங்களின் திரைப்பட உரிமையையும் வாங்கியிருக்கிறார் சி.வி.குமார். ஒவ்வொரு படத்தின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories