சினிமா

நலமாக உள்ளார் பரவை முனியம்மா : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவமனை நிர்வாகம்!

பரவை முனியம்மா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

நலமாக உள்ளார் பரவை முனியம்மா : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவமனை நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா. பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ளார். தூள், காதல் சடுகுடு, ஏய், தோரணை உள்ளிட்ட 25 திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் கடைசியாக மான் கராத்தே படத்தில் நடித்திருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததன் காரணமாக தற்போது வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் பரவை முனியம்மா உடல்நிலை மோசமாகி உயிரிழந்துவிட்டார் என்று வதந்தி பரவியது.

நலமாக உள்ளார் பரவை முனியம்மா : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவமனை நிர்வாகம்!

இதனையடுத்து, பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து வேலம்மாள் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “பரவை முனியம்மா அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தற்போது வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்களால் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை மூலம் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளார்.அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகமே ஏற்று சிகிச்சை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

நலமாக உள்ளார் பரவை முனியம்மா : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவமனை நிர்வாகம்!

நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பரவை முனியம்மா பேசுகையில் உடல் நலக் குறைவால் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தான் நலமாக உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories