சினிமா

அனைத்து விமர்சனங்களையும் தலைவணங்கி ஏற்கிறேன் - நடிகர் சூர்யா டிவீட் !

‘என்.ஜி.கே.’ திரைப்படம் குறித்த அத்தனைக் கருத்துகளையும் தலைவணங்கி ஏற்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

அனைத்து விமர்சனங்களையும் தலைவணங்கி ஏற்கிறேன் - நடிகர் சூர்யா டிவீட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகர் சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் கடந்த மே 31-ம் தேதி வெளியான படம் ‘என்.ஜி.கே’. இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தைப் பற்றிக் கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள த்விட்டேர் பதிவில் “ என்.ஜி.கே திரைப்படம் குறித்த அத்தனைக் கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்டக் கதையம்சத்தையும், நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. #கத்துக்கறேன்தலைவரே” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories