சினிமா

நண்பேண்டா : மீண்டும் ஜோடி போட்டுப் பாட்டு பாடத் தயாராகும் இளையராஜா, எஸ்.பி.பி !

ராயல்டி விவகாரத்தால் பிரிந்திருந்த இசையமைப்பாளர் இளையராஜாவும், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நண்பேண்டா : மீண்டும் ஜோடி போட்டுப் பாட்டு பாடத் தயாராகும் இளையராஜா, எஸ்.பி.பி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் திரையுலகில் இசைஞானி, மேஸ்ட்ரோ, ராகதேவன் என இசை ரசிகர்களின் பல செல்லப்பெயர்களுக்கு சொந்தமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவருடன் இணைந்து பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களைப் பிடிக்காதவர் சொற்பம். அந்த வகையில், இசையை உயிருடன் கடத்தக் கூடிய இணைகளில் இவர்களும் ஒன்று.

இளையராஜாவின் எந்த இசைக்கச்சேரிகளாக இருந்தாலும் அவரது ஆஸ்தான பாடகர்களில் எஸ்.பி.பியும் இருப்பார். ஆனால் கடந்த ஓராண்டுக்கு முன்பு கிளம்பிய காப்புரிமை பிரச்னையால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு பிரிவை ஏற்படுத்தியிருந்தது.

நண்பேண்டா : மீண்டும் ஜோடி போட்டுப் பாட்டு பாடத் தயாராகும் இளையராஜா, எஸ்.பி.பி !

ஆனால், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி, பேட்டிகள், இதர இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவை புகழ்ந்து பேசாமல் எஸ்.பி.பி இருந்ததே இல்லை.

இந்த நிலையில், ஜூன் 2ம் தேதி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டும், திரை இசைப்பயணத்தில் அவர் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டும் இசை செலிபிரேட்ஸ் இசை என்ற பெயரில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சென்னை ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற இருக்கிறது.

நண்பேண்டா : மீண்டும் ஜோடி போட்டுப் பாட்டு பாடத் தயாராகும் இளையராஜா, எஸ்.பி.பி !

இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்களான கே.ஜே.யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ என பலர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் கலந்துக்கொள்கிறார்.

ராயல்டி பிரச்னை காரணமாக இளையராஜா, எஸ்.பி.பி இசையே நீடித்து வந்த பனிப்போர் நீங்கி இருவரும் வெகு நாட்கள் கழித்து இசை மேடையில் தோன்றவுள்ளதை இசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை அவரது ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதற்கு எஸ்.பி.பி. நேரில் வருகைத் தந்து வெகுநாட்கள் கழித்து இருவரும் சந்தித்து பேசியதும், உரையாடியதும், ஒத்திகையில் ஈடுபட்டதும் புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இளையராஜாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், இந்த அன்பும், அரவணைப்பும் பழைய நண்பர்களை சந்திக்கும் போது மட்டுமே வரும் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories