சினிமா

விஜய் சேதுபதியின் ‘சென்னை பழனி மார்ஸ்’!

விஜய் சேதுபதி தயாரிப்பில், அவரது கதை வசனத்தில் உருவாகும் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் ‘சென்னை பழனி மார்ஸ்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விஜய் சேதுபதி தயாரிப்பில், அவரது கதை வசனத்தில் உருவாகும் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் விஜய் சேதுபதி.

பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரித்திருந்தார். படத்தின் கதையை பிஜு விஸ்வநாத்துடன் சேர்ந்து விஜய் சேதுபதியும் எழுதினார். இந்தப் படம் தோல்வியடைந்தது.

இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதையை இணைந்து எழுதியுள்ள விஜய் சேதுபதி - பிஜு விஸ்வநாத் கூட்டணியே படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு நிரஞ்சன் பாபு இசையமைக்கிறார். வரும் மே 22-ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார் விஜய் சேதுபதி.

banner

Related Stories

Related Stories