உலகம்
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
ஆப்கானிஸ்தானின் நகங்கர் மாகாணம் அருகே 8 கி.மீ ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் 4.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிலநடுக்கத்தால் நூர்குல், சோகி, வாட்பூர், மனோகி, சபடேர் ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 622 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும்,1500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பல கிராமங்கள் முற்றாக உருக்குலைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!