உலகம்
ரஷ்யாவில் நிலநடுக்கம் : 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை - இந்தியாவை தாக்குமா?
ரஷ்யாவின் கம்சத்கா தீவில் இன்று 8.7 ரிக்டர் அளவில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உணரப்பட்டுள்ளது. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யா, ஹவாய், சாலமான் தீவு, ஜப்பான் ஆகிய பகுதிகளில் 3 மீட்டர் அளவிற்கு கடல் அலைகள் எழுந்துள்ளது. அப்போது கடற்கரையில் இருந்த மக்கள் ராட்சத அலைகளை கண்டு அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர்.
70 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, பெரு, ஈக்வடார் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து 9 லட்சம் பேர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
அதேபோல் அமெரிக்காவின் கடலோர பகுதியிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!