உலகம்
ரஷ்யாவில் நிலநடுக்கம் : 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை - இந்தியாவை தாக்குமா?
ரஷ்யாவின் கம்சத்கா தீவில் இன்று 8.7 ரிக்டர் அளவில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உணரப்பட்டுள்ளது. கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யா, ஹவாய், சாலமான் தீவு, ஜப்பான் ஆகிய பகுதிகளில் 3 மீட்டர் அளவிற்கு கடல் அலைகள் எழுந்துள்ளது. அப்போது கடற்கரையில் இருந்த மக்கள் ராட்சத அலைகளை கண்டு அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர்.
70 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, பெரு, ஈக்வடார் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து 9 லட்சம் பேர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
அதேபோல் அமெரிக்காவின் கடலோர பகுதியிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“பேரா.வசந்தி தேவி திடீர் மறைவு கல்வித்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்” - முதலமைச்சர் இரங்கல்!
-
“வேர்களைத் தேடி” - 14 நாடுகளிலிருந்து 99 தமிழ் இளைஞர்களின் ‘தமிழ் பண்பாட்டுப் பயணம்’ தொடக்கம்!
-
சென்னை IIT - தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! : முழு விவரம் உள்ளே!
-
ரூ.18.12 கோடியில் சுற்றுலாத்துறைக்கு புதிய கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
திருவண்ணாமலை வளர்ச்சிக்கு... ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்