உலகம்
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதலும் நடத்தி வருகிறது.
இதில் ஹிஸ்புல்லாவின் உச்சபட்ச தலைவரும் அந்த அமைப்பின் பொதுசெயலாளருமான ஹசன் நஸ்ருல்லா, முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் பலரும் இஸ்ரேலில் துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாவின் வாரிசாக கருதப்பட்டரும், ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹஷேம் சபிதீனும் கொல்லப்பட்டார். இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அஃபீப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ரஸ் அல் நபா பகுதியில் இஸ்ரேல் நேற்று வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அஃபீப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சில முக்கிய ஹிஸ்புல்லா தலைவர்களும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கருத்து தெரிவித்துள்ளது.
Also Read
-
“சுயமரியாதைமிக்க மகளிர் பாசிஸ்ட்டுகளையும், அடிமைகளையும் வீழ்த்தப்போவது உறுதி!” : உதயநிதி திட்டவட்டம்!
-
“பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் சம்மட்டி அடி கொடுப்போம்!” : கனிமொழி எம்.பி சூளுரை!
-
“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?