உலகம்
2,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் டாடா குழுமம் : தொடரும் layoff-களால் அதிர்ச்சில் தொழிலாளர்கள் !
ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது.
இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது.சில சிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. ஐ.டி நிறுவனங்களில் தொடங்கிய இந்த வேலையிழப்பு அடுத்தடுத்து பிற துறைகளிலும் தொடர்ந்தது.
அதன் வகையில் உலகின் முன்னணி நிறுவனந்தமான டாடா குழுமம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 2,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா ஸ்டீல் இங்கிலாந்தில் தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது.
இந்த நிறுவனத்தில் 8000 நபர்கள் பணி புரியும் நிலையில், சுற்றுசூழலை பாதிக்காத வகையில் புதிய முறைக்கு மாறவுள்ளதாக தெரிவித்துள்ளது. Decarbonization என அழைக்கப்படும் இந்த முறைக்கு குறைவான தொழிலாளர்களே தேவைப்படுவார்கள் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதன் காரணமாக அந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 2,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யுள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டி.வி. நாரேந்திரன் கூறியுள்ளார். மேலும் தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!