உலகம்

உக்ரைனிய நகரங்களை அடுத்தடுத்து கைப்பற்றும் ரஷ்யா.. இரண்டாவது பெரிய நகரம் ரஷ்ய படைகளால் சுற்றிவளைப்பு !

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

மேலும், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் செய்தது ரஷ்யாவின் கோவத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்த நிலையில், தற்போது தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் வரை பின்னடைவை சந்தித்த ரஷ்யா படை தற்போது முன்னேறி உக்ரைனின் பல முக்கிய இடங்களை கைபற்றிவருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான காா்கிவுக்கு அருகே அமைந்துள்ள குபியான்ஸ்க் மற்றும் இஸியம் நகரங்களை சுற்றிவளைத்துள்ள ரூபீஸ்ஸா தற்போது காா்கிவை நோக்கி முன்னேறி வருகிறது. மேலும், டொனட்ஸ்கைச் சோலெடாா் நகரை ரஷ்யப் படையினா் கைப்பற்றியுள்ள நிலையில், விரைவில் ராணுவமுக்கியத்துவம் வாய்ந்த பாக்முத் நகரம் ரஷ்யப் படைகளால் விரைவில் கைப்பற்றப்படும் என கூறப்படுகிறது.

Also Read: எடப்பாடிக்கு ஏற்பட்ட 8-வது தோல்வி.. RK நகர் முதல் ஈரோடு கிழக்கு வரை.. பட்டியலிட்டு விமர்சித்த முரசொலி !