உலகம்
ராணுவ வீரர்கள் சிறைபிடிப்பு.. பதிலடி கொடுத்த ராணுவம்.. பாகிஸ்தானின் தொடரும் தாலிபான்களின் அட்டகாசம் !
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த பதட்டமான சூழலில் பாகிஸ்தானின் செயல்பட்டு வரும் தாலிபான் அமைப்பின் துணை அமைப்பான 'தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்' எனும் அமைப்பினரை பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைது செய்தனர். மேலும் அவ்ர்களிடமிருந்த ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர்.ர்.
இதற்கு பழிவாங்கும் விதமாக பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் மீது தாலிபான் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி அந்த மையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மேலும் அங்கிருந்த ராணுவ வீரர்கள் சிலரை கொலை செய்த அவர்கள், சிலரை பணயக்கைதியாக பிடித்து வைத்தனர். அதோடு தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்கவேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
எனினும் பாகிஸ்தான் ராணுவம் கிட்டத்தட்ட 40 மணி நேரம் தாலிபான்களோடு சண்டையிட்டு அவர்களை வீழ்த்தி இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். 33 தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அனைத்து பணையக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், "இந்த தாக்குதலால் ராணுவத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும், 10 முதல் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர்" என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரம் பாகிஸ்தானின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !