உலகம்
“உண்மையான வாலுடன் பிறந்த பெண் குழந்தையா..!” - அதிசய நிகழ்வு குறித்து மருத்துவர் அளிக்கும் விளக்கம் என்ன ?
மெக்சிகோவில் பெண் குழந்தை ஒன்று 2 அங்குல நீள வாலுடன் பிறந்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை 195 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது.
மெக்சிக்கோ பகுதியில் நியூவோ லியோனில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில், கடந்த சில மாதங்களுக்கு 2 அங்குல நீள வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வாலுடன் பிறந்த இந்த குழந்தை உலகில் அரிய குழந்தையாக கருதப்படுகிறது. ஏனெனில் உலகிலேயே இதுவரை சுமார் 195 குழந்தைகள் மட்டுமே இதுபோன்று வாலுடன் பிறந்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து அந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், "நிறைமாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு, 5.7 செ.மீ நீளத்தில் (2 அங்குலம்) மென்மையாகவும், கூர்மையாகவும் வால் ஒன்று காணப்பட்டது. தோலால் மூடப்பட்ட நிலையில் இருந்த அந்த வாலில் மெல்லிய ரோமங்களும் இருந்தன. அந்த வால், கூர்மையான முனையை நோக்கி குறுகிக் காணப்பட்டது.
மெக்சிக்கோவில் இப்படி ஒரு குழந்தை பிறப்பது இதுதான் முதல் முறை. அந்த வாலை தொட்டு அசைக்கும்போது குழந்தை எந்த வலியையும் உணரவில்லை. ஆனால் ஊசியால் குத்தியபோது குழந்தை வலியை உணர்ந்து கத்தியது.
குழந்தைக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த வால் அகற்றப்பட்டது. மேலும் அதை ஆய்வுக்கு அனுப்பினோம். தசை மற்றும் நரம்புகளைக் கொண்ட உண்மையான வால் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்குகளுக்கு இருப்பது போன்று எலும்புகளற்றது என்பது தெரியவந்தது" என்றார்.
இது போன்ற நிகழ்வு மிகவும் அரிதானது என்பதால், இதுவரை 195 குழந்தைகள் இது போன்று வால் வைத்து பிறந்துள்ளது. அப்படி பிறந்த 17 குழந்தைகளில் ஒரு குழந்தை மூளை அல்லது மண்டை ஓட்டின் வளர்ச்சிக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறது. அதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியில் இன்னும் கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!