உலகம்
பணிநீக்கிய ஊழியரை வேலைக்கு அழைத்து பின்னர் மீண்டும் நீக்கிய Twitter- வறுத்தெடுக்கும் இணையவாசிகள் !
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.அதைத் தொடர்ந்து ட்விட்டர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதோடு இதெற்கு ஒப்புக் கொண்டால் மட்டும் வேலைக்கு வரலாம் என்றும், உங்கள் ராஜினாமாக்களை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம் அதிக நேரம் பணிபுரியவேண்டும் என்ற எலான் மஸ்க்ன் கோரிக்கைக்கு ட்விட்டர் ஊழியர்கள் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பலர் ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ட்விட்டர் முன்னாள் ஊழியர் ஒருவரின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அவரின் பதிவில் "நவம்பர் தொடக்கத்தில் நான் ட்விட்டரில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன், சிறிது நேரத்திற்குப் பிறகு நான் மீண்டும் அழைக்கப்பட்டேன், ஏனென்றால் நான் முக்கியமான திறமைசாலி என்று அவர்கள் நினைக்கிறார்கள், அதைத் தொடர்ந்து நேற்றிரவு, நான் திடீரென எந்த காரணமும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டேன்" என்று கூறியுள்ளார். இதனை பார்த்த இணையதள வாசிகள் எலான் மஸ்க் மற்றும் ட்விட்டரின் செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“சாதிய அடையாளங்களை நீக்கி வருகிறோம்!” : இந்தியா டுடே மாநாடு 2025-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை கழக மாவட்டங்கள் வாரியாக நடத்த வேண்டும்..” - முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! : எங்கு? எப்போது?
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!