உலகம்
துருக்கி : மனிதனின் வயிற்றில் முளைத்து வளர்ந்த அத்திமரம்.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை !
துருக்கியில் கிரேக்க எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்தில் அத்தி மரம் ஒன்று வளர்ந்துள்ளது. அந்த பகுதியில் அது போன்ற மரம் இல்லாததால் இது எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் ஒரு பகுதியாக மரத்தின் அடியில் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அதில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மரத்தின் அடியில் ஒரு மனிதனின் சடலம் ஒன்று இருந்துள்ளது. அந்த சடலத்தின் வயிற்றில் இருந்தே இந்த அத்திமரம் முளைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
உருக்குலைந்து மோசமான நிலையில் இருந்த அந்த சடலத்தை ஆய்வாளர்கள் போலிஸாரின் உதவியுடன் பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், அவரின் மரபணுக்களை வைத்து சோதனை செய்தபொது அந்த நபர், துருக்கி பழங்குடியினத்தை சேர்ந்த அகமது அர்க்யூன் என்பது தெரியவந்தது.
அவர் கடந்த 1974-ம் ஆண்டு முதல் காணாமல் போனதும் தெரியவந்தது. அந்த காலத்தில் துருக்கி எல்லையில் இரு பழங்குடி மக்களிடையே யுத்தம் நடைபெற்று வந்துள்ளது. அதில் ஒரு தரப்பில் அகமது அர்க்யூன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். அப்போது எதிரிகள் கைகளில் சிக்கிய அகமது அர்க்யூனை எதிரிகள் பிடித்து வந்து இந்த இடத்தில் வைத்து கொலைசெய்திருக்கலாம் என்று போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர், அத்திப்பழத்தை சாப்பிட்டிருப்பதாகவும், அந்த அத்திப்பழத்தின் விதைதான் அவரது வயிற்றில் இருந்து வளர்ந்துள்ளதாகவும் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!